ஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதர் வாஜ்பாய்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16-ந்தேதி காலமானார். அவருக்கு புகழ் அஞ்சலிசெலுத்தும் கூட்டம், நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். மோடி பேசியதாவது:-

வாஜ்பாய், கடந்த 1996-ம் ஆண்டு ஆட்சி அமைத்த போது, அவரது அரசை ஆதரிக்க எந்தகட்சியும் முன்வரவில்லை. அதனால், 13 நாட்களில் ஆட்சிகவிழ்ந்தது. இருப்பினும், வாஜ்பாய் நம்பிக்கை இழக்கவில்லை. மக்களுக்காக தொடர்ந்து பாடுபட உறுதி பூண்டார். கூட்டணி அரசு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காண்பித்தார்.

1998-ம் ஆண்டு, துணிச்சலாக அணுகுண்டு சோதனை நடத்தி, இந்தியாவை அணு ஆயுத நாடாக உயர்த்தினார். அதற்கு அவரது உறுதியான தலைமைதான் காரணம். உலக நாடுகள் நெருக்குதல் கொடுத்தும், அவர் பணியவில்லை. 1999-ம் ஆண்டு கார்கில்போர் வெற்றிக்கு பிறகு, இதே அரங்கில் இருந்துதான் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வாஜ்பாய், நீண்ட காலமாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். ஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதராக இருந்தார். அவர் ஒரு மகாபுருஷர்.

சாமானியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவர், பெயரில் மட்டுமின்றி, உறுதிப் பாட்டை காட்டுவதிலும் ‘அடல்’ ஆக இருந்தார். சிறந்த நாடாளுமன்ற வாதியாக திகழ்ந்தார். அவர் உத்தரகாண்ட், ஜார்கண்ட், சத்தீஷ்கார் ஆகிய 3 புதிய மாநிலங்களை உருவாக்கிய போது எந்த கசப்புணர்வும் இல்லை. அந்த பணி அமைதியாக நடந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த கூட்டத்தில், வாஜ்பாயின் வளர்ப்புமகள் நமீதா பட்டாச்சார்யா, மருமகன் ரஞ்சன் பட்டாச் சார்யா, பேத்தி நிஹரிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியுஷ் கோயல், ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், ஹர்சிம்ரத் கவுர் பாதல், ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அத்வாலே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பங்கேற்றனர்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை (அ.தி.மு.க.), குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா (இருவரும் காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), டேனிஸ்அலி (ஐக்கிய ஜனதாதளம்), ஜெயபிரகாஷ் நாராயண யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்), தாரிக் அன்வர் (தேசியவாத காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டுகட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சந்திரகாந்த் கைரே (சிவசேனா) என முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...