ரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல்:

இந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடிசெலவில் 135 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவில் சிறியரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களும் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.


 பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில் தில்லியில் சனிக் கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு (டிஏசி) கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடற்படைக்கு 2 வகையான ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப் படவுள்ளன.


அதில் 111 கடற்படை பயன் பாட்டு ஹெலிகாப்டர்களும் (என்யுஹெச்), 24 கடற்படை பல் திறன் ஹெலிகாப்டர்களும் (என்எம்ஆர்ஹெச்) வாங்கப்படவுள்ளன. "என்யுஹெச்' ஹெலிகாப்டர்கள்: இதில் என்யுஹெச் ரக ஹெலிகாப்டர்களானது, தாக்குதல் நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் பயன் படுத்தப்படும்.


 இந்த என்யுஹெச் ஹெலிகாப்டர் கொள்முதலானது, வெளிநாட்டு பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப் படும் முதல் திட்டமாகும். இந்த தயாரிப்புத்திட்டம் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் கொண்டுவரப் பட்டதாகும்.


 "என்எம்ஆர்ஹெச்' ஹெலிகாப்டர்கள்: மற்றொரு ரகமான, என்.எம்.ஆர்.ஹெச் ரக ஹெலிகாப்டர்களானது, எதிரிகள் நீர்மூழ்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தக்கூடியதும், பல்வேறு பணிகளில் பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டதுமாகும்.


 இந்த ஹெலிகாப்டர்கள், போர்க்காலத்தில் முன்னணியில் பயன்படுத்தப்படும் போர்க் கப்பல்களில் ஓர் அங்கமாக இருக்கும். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் தடையின்றி உலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ளக் கூடிய திறன் தேவையான ஒன்றாக உள்ளதால் இந்த ஹெலிகாப்டர்களின் தேவை அவசியமாகிறது.
 கடற்படையில் பயன் படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள், ராணுவம் மற்றும் விமானப் படையில் பயன்படுத்தப் படுவதைக் காட்டிலும் கடினத் தன்மை கொண்டதாக இருக்கும். கடலின் உப்புக் காற்றை எதிர்கொள்ளும் வகையில் அதன் பெயிண்ட் பூச்சுகள் இருப்பதுடன், அதன்ரேடார் மற்றும் ஆயுதங்களும் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.


இது தவிர, குறைந்த தூரத்திலான இலக்குகளை செங்குத்தாக சென்று தாக்கும் திறன்கொண்ட 14 ஏவுகணை தளவாட அமைப்புகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஏவுகணை தளவாட அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்க படவுள்ளன. இவை கப்பல்களுக்கு எதிரான ஏவுகணைகளை தகர்க்கும் திறன் கொண்டதாகும். இந்த தளவாடக் கொள்முதல்கள், போர் கப்பல்களின் தற்காப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கும்.


இதனிடையே, ரூ.24,879.16 கோடி செலவில் ராணுவத்துக்கும் தளவாடங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்முதலில், 155 மில்லி மீட்டர் குண்டுகளை பயன் படுத்தக் கூடிய சிறிய ரக 150 பீரங்கிகளும் அடங்கும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த பீரங்கிகளுக்கான கொள்முதல்செலவு ரூ.3,364.78 கோடியாகும்.


 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்ட இந்த பீரங்கிகள், அந்த அமைப்பால் பரிந்துரைக்கப் படும் நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படும். கடற்படையில் உள்ள பழைய ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கவும், பல்வேறு பணிகளிலும் பயன் படுத்தக் கூடிய வகையிலான ஹெலிகாப்டர்களை வாங்குவதன் மூலமாக பலத்தை அதிகரிக்கவும் மத்தியஅரசை கடற்படை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...