ரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல்:

இந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடிசெலவில் 135 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவில் சிறியரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களும் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.


 பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில் தில்லியில் சனிக் கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு (டிஏசி) கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடற்படைக்கு 2 வகையான ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப் படவுள்ளன.


அதில் 111 கடற்படை பயன் பாட்டு ஹெலிகாப்டர்களும் (என்யுஹெச்), 24 கடற்படை பல் திறன் ஹெலிகாப்டர்களும் (என்எம்ஆர்ஹெச்) வாங்கப்படவுள்ளன. "என்யுஹெச்' ஹெலிகாப்டர்கள்: இதில் என்யுஹெச் ரக ஹெலிகாப்டர்களானது, தாக்குதல் நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் பயன் படுத்தப்படும்.


 இந்த என்யுஹெச் ஹெலிகாப்டர் கொள்முதலானது, வெளிநாட்டு பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப் படும் முதல் திட்டமாகும். இந்த தயாரிப்புத்திட்டம் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் கொண்டுவரப் பட்டதாகும்.


 "என்எம்ஆர்ஹெச்' ஹெலிகாப்டர்கள்: மற்றொரு ரகமான, என்.எம்.ஆர்.ஹெச் ரக ஹெலிகாப்டர்களானது, எதிரிகள் நீர்மூழ்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தக்கூடியதும், பல்வேறு பணிகளில் பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டதுமாகும்.


 இந்த ஹெலிகாப்டர்கள், போர்க்காலத்தில் முன்னணியில் பயன்படுத்தப்படும் போர்க் கப்பல்களில் ஓர் அங்கமாக இருக்கும். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் தடையின்றி உலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ளக் கூடிய திறன் தேவையான ஒன்றாக உள்ளதால் இந்த ஹெலிகாப்டர்களின் தேவை அவசியமாகிறது.
 கடற்படையில் பயன் படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள், ராணுவம் மற்றும் விமானப் படையில் பயன்படுத்தப் படுவதைக் காட்டிலும் கடினத் தன்மை கொண்டதாக இருக்கும். கடலின் உப்புக் காற்றை எதிர்கொள்ளும் வகையில் அதன் பெயிண்ட் பூச்சுகள் இருப்பதுடன், அதன்ரேடார் மற்றும் ஆயுதங்களும் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.


இது தவிர, குறைந்த தூரத்திலான இலக்குகளை செங்குத்தாக சென்று தாக்கும் திறன்கொண்ட 14 ஏவுகணை தளவாட அமைப்புகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஏவுகணை தளவாட அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்க படவுள்ளன. இவை கப்பல்களுக்கு எதிரான ஏவுகணைகளை தகர்க்கும் திறன் கொண்டதாகும். இந்த தளவாடக் கொள்முதல்கள், போர் கப்பல்களின் தற்காப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கும்.


இதனிடையே, ரூ.24,879.16 கோடி செலவில் ராணுவத்துக்கும் தளவாடங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்முதலில், 155 மில்லி மீட்டர் குண்டுகளை பயன் படுத்தக் கூடிய சிறிய ரக 150 பீரங்கிகளும் அடங்கும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த பீரங்கிகளுக்கான கொள்முதல்செலவு ரூ.3,364.78 கோடியாகும்.


 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்ட இந்த பீரங்கிகள், அந்த அமைப்பால் பரிந்துரைக்கப் படும் நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படும். கடற்படையில் உள்ள பழைய ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கவும், பல்வேறு பணிகளிலும் பயன் படுத்தக் கூடிய வகையிலான ஹெலிகாப்டர்களை வாங்குவதன் மூலமாக பலத்தை அதிகரிக்கவும் மத்தியஅரசை கடற்படை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...