உயர் நீதி மன்றம் மற்றும் காவல்துறையை விமர்சித்த வழக்கில் பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜா அக்டோபர் 22-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர்சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் விமர்சித்ததாக கூறி திருமயம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்நிலையில், என்னை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தெரியாது. நான் தலைமறைவாக இல்லை என்று பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜா சனிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், திருக்கடையூரில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழக கோயில்களில் அறநிலையத் துறை அதிகாரிகள் 82 சதவீதம் கொள்ளையடித் துள்ளனர் என்று பேட்டியளித்தார்.
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப் படுத்தினர், ஆனால் தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிலைகளை ஏன் அனுமதிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.