சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதித் துறை தலையிடுவது ஏற்புடையதல்ல

சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதித் துறை தலையிடுவது ஏற்புடையதல்ல என, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது, எனவே சபரி மலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது என தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து இந்த தீர்ப்புக்கு நாடுமுழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார்  கூறுகையில், “பெண் ஆர்வலர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி மனுதாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள 6 கோயில்களில் பெண்கள் மட்டும்தான் செல்ல முடியும். சைவம், வைணவம் போன்று சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறை சாஸ்தம் எனப்படுகிறது. அதனால், அவரவர்களுக்கென இருக்கும் வழிபாட்டு முறைகளில் நீதித் துறை தலையிடுவது ஏற்புடையதல்ல. அதனால், தேவஸ்தானம் போர்டு என்ன முடிவெடுக்கிறதோ அதை நாம் ஆதரிப்போம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...