மோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது

திருச்சி தூயவளனார் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா மற்றும் திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி மையம் திறப்புவிழா இன்று நடைபெற்றது.


இதில் பங்கேற்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை திருச்சிவந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இங்குவந்துள்ளேன். திருச்சி தேசிய தொழில் நுட்ப வளாகத்தில் (என்.ஐ.டி.) இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.190 கோடியில் உயர் ஆய்வுமையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரேவளாகத்தில் 13 ஆய்வக கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளது சிறப்பாகும். இது என்ஜினீயரிங் கல்வி மேம்பாட்டுக்காக மட்டுமல்லாது, தொழிற்சாலை திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும்.
 

இதைத்தொடர்ந்து திருச்சி ஜோசப் கல்லூரி 150-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறேன். மத்திய நரேந்திரமோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைவிட, மோடி ஆட்சியில் 2 மடங்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 

பொது மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கியாஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் முன்பு இருந்ததைவிட கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்கு கூடுதலாக நிறைவேற்றப் பட்டுள்ளது.

தற்போது பெட்ரோல்- டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஒருலிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. பாஜக ஆளும் 13 மாநிலங்களில் அந்தமாநில அரசுகளும் லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. இதன் மூலம் ரூ.5 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்புவாய்ந்த சாதனைகளை செய்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...