தமிழகத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்

கடந்த சனியன்று (ஆக.,31) தமிழகத்தில் இரு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கி வைத்தார்.அந்த இரு வந்தே பாரத் ரயில்களும் இன்று (செப்.,02) திங்கள் அதிகாலை முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தன சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை ஒரு வந்தே பாரத் ரயிலும், மதுரையிலிருந்து பெங்களூரு வரையிலான வந்தே பாரத் ரயில் ஒன்றும் பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்டன.

எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்

* சென்னை – நாகர்கோவில் (20627) வந்தே பாரத் ரயில் அதிகாலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு 5:23 க்கு தாம்பரம், 6:52க்கு விழுப்புரம், 8:55க்கு திருச்சி, 9:53க்கு திண்டுக்கல், 10:38க்கு மதுரை வந்து சேரும். இங்கிருந்து 10:40க்கு புறப்பட்டு 11:35க்கு கோவில்பட்டி, மதியம் 12:30க்கு திருநெல்வேலி, 1:50க்கு நாகர்கோவில் சென்றடையும்.

* மறுமார்க்கத்தில் மதியம் 2:20க்கு புறப்பட்டு மாலை 3:18க்கு திருநெல்வேலி, 3:58க்கு கோவில்பட்டி, 5:03க்கு மதுரைக்கு, 5:48க்கு திண்டுக்கல், 6:45க்கு திருச்சி, 8:53க்கு விழுப்புரம், 10:28க்கு தாம்பரம், 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும். * மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் (20671) அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து காலை 6:01க்கு புறப்பட்டு 6:50க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து 6:55க்கு புறப்பட்டு 8:08க்கு கரூர், 8:32க்கு, நாமக்கல், 9:15க்கு, சேலம், மதியம் 12:50 மணிக்கு பெங்களூரு கிருஷ்ணராஜபுரம், 1:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம்.

* மறுமார்க்கத்தில் மதியம் 1:30க்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55, மாலை 4:50 க்கு சேலம், 5:38 க்கு நாமக்கல், 5:58 க்கு கரூர், இரவு 7:20 மணிக்கு திருச்சி, 9:08க்கு திண்டுக்கல், 9:45 மணிக்கு மதுரை வந்து சேரும். மொத்த பயண நேரம் 8 மணி 15 நிமிடம். 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.