பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அதை முற்றிலும் ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன

பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும், அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கர வாதம் என்ற கொடூரச் செயலை எதிர்த்து உலக நாடுகளுடன் இணைந்து உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றும் இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், இந்தியா – ரஷ்யா நாடுகள் சார்பில் இணைந்து கூட்டறிக்கை வெளியிடப் பட்டது. பயங்கரவாத பிரச்னையில் இரட்டை நிலைப்பாட்டை எந்தவொரு நாடும் கொண்டிருக்க கூடாது. தீவிரவாத அமைப்புகளின் நெட்வொர்க்கை முற்றிலுமாக அழிப்பதுடன், அந்த அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளைக் கண்டிப் பதற்கான முயற்சிகளையும் எடுக்கவேண்டும். 

பயங்கரவாதக் கொள்கை, அது தொடர்பான பிரசாரம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிரசாரங்களையும் முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும். சர்வதேசளவில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த மாநாட்டை ஐ.நா உடனடியாக நடத்தவேண்டும். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தான் தலைமையிலான அமைதி மற்றும் கூட்டுறவு முயற்சிகளை இந்தியாவும் ரஷ்யாவும் ஆதரிப்பது என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை, கல்வி மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, தரையிலிருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய எஸ் – 400 ஏவுகணைகளை இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தமும் இதில் அடங்கும். வர்த்தகம், ரயில்வே, அணு சக்தி மற்றும் குறு, சிறு தொழில்துறையில் இதர ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...