தி.மு.க., ஒரு நிறுவனம்

ரபேல் விமானம் தொடர்பாக, தவறான கருத்துக்களை கூறிய, காங்கிரஸ்., தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்,” என, பா.ஜ., தேசிய பொதுச்செயலர், ராம் மாதவ் தெரிவித்தார்.

சென்னை, பா.ஜ., அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:’ரபேல் விமானம் வாங்கியதில், எந்தமுறைகேடும் இல்லை’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும், தீர்வுவந்துள்ளது. இது குறித்து, பார்லிமென்டில் விவாதிக்க தயாராக உள்ளோம்; எதிர்க்கட்சிகள் தயாரா? வெளிப்படையான, இடைத்தரகர் இல்லாத ஒப்பந்தம் போட்டுள்ளோம். திருடர்கள், நல்லவர்களை பார்த்து, ‘திருடன், திருடன்’ என்பர்; அதுபோல, காங்கிரஸ்., கூறுகிறது. தவறான கருத்துக்களை பரப்பியதற்காக, ராகுல் மன்னிப்புகேட்க வேண்டும்.

தி.மு.க., ஒருநிறுவனம். வாஜ்பாயுடன் கூட்டணி அமைத்தபோது, நன்றாக இருந்தனர். காங்கிரசுடன் சேர்ந்தபின், ஊழல் செய்து, திகார் சிறைக்கு சென்றனர். மீண்டும், திகார் சிறைக்குசெல்ல விரும்பினால், நாங்கள் என்ன செய்ய முடியும்?எங்களை பாஸிச ஆட்சி என்கின்றனர்; திமுக., தான் பாஸிச ஆட்சி நடத்தியது. மெகாகூட்டணி அமைத்தாலும், நாங்கள், அவர்களை எதிர்த்து, வெற்றி பெறுவோம்.

ஐந்து மாநில தேர்தல், லோக்சபா தேர்தலில் எதிரொலிக்காது.பல ஆண்டுகளுக்கு, பிரதமர்பதவி காலியாகாது. ஆனால், பிரதமர் பதவிக்கு, ராகுலை, ஸ்டாலின் அறிவித்துள்ளார். எதன் அடிப்படையில், அப்படி அறிவித்தார் என, தெரியவில்லை.இவ்வாறு, ராம் மாதவ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...