எங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சான்று

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு ஊழலுக்கு எதிரானது என்பதற்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா வழக்கே சிறந்த உதாரணம் என கட்சி தெரிவித்துள்ளது.

கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக மும்பை நீதி மன்றம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து  கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித்பத்ரா தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியின் போது மல்லையாவுக்கு அந்த அரசின் ஆதரவு இருந்தது. காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்த மல்லையா, தனக்குகிடைத்த உதவிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்ததுடன், மேலும் கடன்பெற உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து மல்லையாவுக்கு தேவையான உதவிகளை செய்ய மன்மோகன்சிங் தனது செயலருக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் வங்கிக் கடன்களை திருப்பிச்செலுத்தாத நிலையிலும், அவருக்கு மேற்கொண்டு கடன் வழங்கப்பட்டது. அத்துடன், அவர் திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் தொகை குறைத்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவில் ரூ.9,000 கோடி மோசடி செய்துவிட்டு மல்லையா வெளியநாடு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் போன்ற தலைமறைவு நிதி மோசடியாளர்களை நீதிமன்றத்தின் முன்னாள் கொண்டுவந்து நிறுத்துவதை உறுதிசெய்யும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை கொண்டுவந்தது.

தற்போது மல்லையா அந்தசட்டத்தின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது, ஊழலுக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். காங்கிரஸ் அரசு மோசடியாளர்களுக்கு உதவுகிறது. நாங்கள் மோசடியாளர்களை நீதியின்முன்பாக கொண்டு வருகிறோம்.

இதுவே எங்களுக்கும், காங்கிரஸுக்கும் இடையேயான வித்தியாசமாகும் என்று சம்பித் பத்ரா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...