மமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநிறுவனத்தில் பணத்தை இழந்த பொதுமக்கள் கூட்டமைப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 17 லட்சம் பேரிடம் கோடிக் கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டியது சாரதா நிதிநிறுவனம். பணத்தை இழந்த அதிர்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். அரசியல் முக்கியப் புள்ளிகளின் நேரடி தொடர்புடைய இந்த ஊழல் விவகாரம் சிபிஐயின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில்தான் சிபிஐ அமைப்புக்கு மேற்கு வங்காள அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு முன்னர், இந்த ஊழல் வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த வரும், தற்போதைய கொல்கத்தா மாநகர காவல் ஆணையருமான ராஜீவ் குமாருக்கு சிபிஐ தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் அவரை கைது செய்யும் நோக்கில் சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றபோது, கொல்கத்தா காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பின்னர் விடுவித்தனர்.

இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜி, ராஜீவ் குமாருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசை கண்டித்து கடந்த 3 நாட்களாக அவர் தர்ணா போராட்டமும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சிபிஐ விசாரணையை தடுத்துநிறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மேற்குவங்க அரசின் நடவடிக்கை அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைப்பதாக சாரதா மற்றும் இதர நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட மக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உண்மைகளை வெளிக்கொடுவரும் முயற்சியாக கொல்கத்தா காவல் ஆணையரிடம் விசாரணை நடத்த சிபிஐ அமைப்பிற்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத் தக்கதோடு உண்மையை மறைக்கும் விதமாகவும் இது அமைந் துள்ளதாக Chit Fund Sufferers Forum அமைப்பின் தலைவர் அசிம் சட்டர்ஜி தெரிவித்தார்.

மேலும் மமதா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் பங்கேற்கும் கண்டன் பேரனி நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் சாரதா, ரோஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு நிதிநிறுவனங்களை நம்பி பணம் இழந்தவர்கள் மட்டும் சுமார் 25 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...