மமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநிறுவனத்தில் பணத்தை இழந்த பொதுமக்கள் கூட்டமைப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 17 லட்சம் பேரிடம் கோடிக் கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டியது சாரதா நிதிநிறுவனம். பணத்தை இழந்த அதிர்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். அரசியல் முக்கியப் புள்ளிகளின் நேரடி தொடர்புடைய இந்த ஊழல் விவகாரம் சிபிஐயின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில்தான் சிபிஐ அமைப்புக்கு மேற்கு வங்காள அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு முன்னர், இந்த ஊழல் வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த வரும், தற்போதைய கொல்கத்தா மாநகர காவல் ஆணையருமான ராஜீவ் குமாருக்கு சிபிஐ தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் அவரை கைது செய்யும் நோக்கில் சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றபோது, கொல்கத்தா காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பின்னர் விடுவித்தனர்.

இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜி, ராஜீவ் குமாருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசை கண்டித்து கடந்த 3 நாட்களாக அவர் தர்ணா போராட்டமும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சிபிஐ விசாரணையை தடுத்துநிறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மேற்குவங்க அரசின் நடவடிக்கை அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைப்பதாக சாரதா மற்றும் இதர நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட மக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உண்மைகளை வெளிக்கொடுவரும் முயற்சியாக கொல்கத்தா காவல் ஆணையரிடம் விசாரணை நடத்த சிபிஐ அமைப்பிற்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத் தக்கதோடு உண்மையை மறைக்கும் விதமாகவும் இது அமைந் துள்ளதாக Chit Fund Sufferers Forum அமைப்பின் தலைவர் அசிம் சட்டர்ஜி தெரிவித்தார்.

மேலும் மமதா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் பங்கேற்கும் கண்டன் பேரனி நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் சாரதா, ரோஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு நிதிநிறுவனங்களை நம்பி பணம் இழந்தவர்கள் மட்டும் சுமார் 25 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...