மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல்செய்த மத்திய அரசு, ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரிச்சலுகை, பிரதமர் கிசான்சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதை ஈடு செய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.28,000 கோடியை இடைக்கால டிவிடெண்டாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த சூழ்நிலையில், மத்திய வங்கியின் மத்திய வாரியக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்று, இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விளக்கிப்பேசினார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு விடுத்த வேண்டு கோளின்படி, 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ்வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.