28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்கிய ரிசர்வ் வங்கி

மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல்செய்த மத்திய அரசு, ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரிச்சலுகை, பிரதமர் கிசான்சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.28,000 கோடியை இடைக்கால டிவிடெண்டாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த சூழ்நிலையில், மத்திய வங்கியின் மத்திய வாரியக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்று, இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விளக்கிப்பேசினார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு விடுத்த வேண்டு கோளின்படி, 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ்வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...