இந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு எமன் ஆனது என்பதே வரலாறு.

ராகுல் காந்தியை எனக்கு விமர்சிக்க  தகுதிகள் உள்ளதா என்று கேட்ட தமிழககாங்கிரஸ் தலைவர் அண்ணன் கே.ஸ்.அழகிரி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு என்  பதில்.

நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால் ராகுல் காந்திக்கு காங்கிரஸ்தலைவர் பதவி வழங்கப்பட்டது. யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலைசுய புத்தியுடன் பகுத்தாய்ந்து  பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்டதொண்டராய் உழைப்பால் தலைவராக படிப்படியாக உயர்ந்த எனக்கு இந்திய குடிமகள்தமிழ்நாட்டு பிரஜை என்ற முறையில் எனக்கு எல்லாம் தகுதிகளும் உண்டென்பதைஉங்களுக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாக புரியும்.

காமராஜரை புகழ பாஜகவிற்கு  என்ன உரிமை எனக் கேட்கும் உங்களுக்கு காமராஜர்காலத்திலேயே  காமராஜரை கைவிட்டுவிட்டு இந்திரா காங்கிரஸ்க்கு ஓடிப்போனகோஷ்டியிலிருந்து வந்ததே தகுதி என தலைவரான உங்களுக்கு காமராஜரை பற்றி பேச தகுதி இருக்கிறது என நீங்கள் நினைக்கும் போது தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசிய கட்சியில் பணியாற்றும் எனக்கு எல்லா தகுதி உள்ளது.

கார்த்திக் சிதம்பரம் காமராஜர் பெயரை சொல்லி எத்தனை நாளுக்கு  அரசியல் செய்யபோகிறீர்கள் என சத்யமூர்த்தி பவனில் பேசியபோது  உங்களுக்கு வராத கோபம் நாங்கள்காமராஜர் புகழ்பாடும் போது வருவது ஏன்?

பெயில் குடும்ப வாரிசுகளின் ஆசிபெற்றவர் என்ற தகுதியில் தலைவரான நீங்கள் என்தலைமைத் தகுதியை விமர்சிக்கிறீர்கள். இந்திரா கொண்டு வந்த அவசரகாலபிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு எமன் ஆனது என்பது வரலாறு.

இந்திரா காந்தி அம்மையாரை மதுரையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடுஅவர் சிந்திய ரத்தத்தை பெண்மையின் மாண்பை ஆபாசமாக விவரித்த தி.மு.க. உடன்கூட்டு வைக்கும் நீங்கள் அதே தி.மு.க தான் காமராஜர் அவர்கள் தேர்தலில் போட்டயிடும் போது அவருக்கு எதிராக ஒருமாணவனை நிறுத்தி சிறுமைப்படுத்தியது.

அதே தி.மு.கவுடன் கூட்டணி வைக்கும் நீங்கள் காமராஜரை பற்றி பேசலாமா?

மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பண மதிப்பிழப்புநடவடிக்கை மேற்கொள்ளும் போது மரியாதைக்குரிய காமராஜர் அவர்கள் என்னுடைய இந்த செயலை மிகவும்  பாராட்டியிருப்பார் என்று கூறினார்கள்.

நீங்கள் கூறும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கலைக்கப்பட்டு விட்டது. இப்போதுள்ள காங்கிரஸ் ஊழல் நிறைந்த காங்கிரஸ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...