நமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக்கடி அவமானப் படுத்துகிறார்கள்

இந்திய போர்விமானங்கள் பாகிஸ்தானின் பாலாகோட்டில் பயங்கர வாதிகளின் முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக மேலும் விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரியதற்காக காங்கிரஸ் கட்சியின் சாம்பித்ரோடா மீது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்ற்சாட்டுகளைத் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசும் எதிர்க்கட்சி தலைவர்களை நாட்டுமக்கள் மன்னிக்க மாட்டார்கள் என டுவிட்டரில் பிரதமர் நரேந்திரமோடி செய்தி விடுத்துள்ளார்.

ஏ என் ஐ செய்தி நிறுவனத்துக்கு சாம்பித்ரோடா அளித்த பேட்டி வெளியானதும் ட்விட்டர் மூலம் சரமாரியாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்கத் தொடங்கினார்.

பாகிஸ்தான் தேசியதின கொண்டாட்டத்துக்கு தகுந்த முன்னுரையாக காங்கிரஸ் தலைவருக்கு வழிகாட்டியாக விளங்கும் சாம்பிட்ரோடா காங்கிரஸ் சார்பாக கொண்டாட்டங்களை துவக்கி இருக்கிறார் .

இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்திய ராணுவத்தின் திறன்மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது .வெட்கக்கேடு என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.

மற்றொரு ட்விட்டர் செய்தியில் பிரதமர் மோடி கூறியது கூறியது வருமாறு

நமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக்கடி அவமானப் படுத்துகிறார்கள் இந்திய குடிமக்களுக்கு நான் இப்பொழுது வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன்.

இந்திய ராணுவத்தின் திறனை அவமானப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் அவர்கள் கூறும் கருத்துகள் தொடர்பாக மக்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பவேண்டும்>

எதிர்க்கட்சித் தலைவர்களை அவர்களது அறிக்கைகளுக்காக 130 கோடி இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள். மறந்துவிடவும் மாட்டார்கள் .

இந்திய ராணுவத்துடன் இந்திய மக்கள் முழுமையாக ஒருங்கிணைந்து நிற்கிறார்கள் ,என மோடி தன்னுடைய டுவிட்டர்செய்தியில் குறிப்பிட்டார்

காங்கிரஸ் குடும்ப சாம்ராஜ்ஜியத்தின் விசுவாசமான குட்டிசமஸ்தான  தலைவராக விளங்கும் சாம்பித்ரோடா பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய படைகள் மேற்கொண்ட தாக்குதலை நம்பமுடியாது என்று எதிர்கருத்து வெளியிட்டுள்ளார். இது புதிய இந்தியா! பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நாங்கள் அவர்கள் மொழியிலேயே அவர்கள் புரிந்துகொள்ளும் வழியில் வட்டியுடன் பதில் தருவோம். என்று மற்றொரு டுவிட்டர் செய்தியில் பிரதமர் மோடி பதில்கூறினார்.

ராம் கோபால் யாதவுக்கு பதிலடி

புல்வாமா தாக்குதல் குறித்து வியாழன் அன்று கேள்வி எழுப்பிய சமாஜ்வாடி கட்சிதலைவர் ராம்கோபால் யாதவையும் பிரதமர் நரேந்திர மோடி விட்டுவைக்கவில்லை.

ராம் கோபால்யாதவ குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி விவரம்:

பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும் நமது ராணுவத்தின் செயல்கள்குறித்து கேள்வி எழுப்பியும் குறை கூறி வருவோரின் இயற்கையான கூடாரமாக எதிர்க்கட்சிகள் அமைந்துள்ளன.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால்ஜி யின் அறிக்கை கண்டனத்துக்குரியது. அவர் நமது ஜம்மு காஷ்மீரை பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம்செய்யும் ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துகிறார்.

தங்கள் உயிரை தியாகம்செயத தியாகிகளின் குடும்பத்துக்கு அவமானம் தேடிதருகிறார் என நரேந்திர மோடி தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

 

சாம் பித்ரோடாவின் பேட்டி குறித்து டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சில நிமிடங்களில் விளக்கம் ஒன்றை ஏ என் ஐ செய்தி நிறுவனம் மூலமாக சாம் பித்ரோடா வெளியிட்டார். இந்தியாவின் சாதாரணகுடிமக்களின் நானும் ஒருவன். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள எனக்கு உரிமை உள்ளது .காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் இப்பொழுது பேசவில்லை. இந்தியாவின் சாதாரணக் குடிமகனாகவே நான் வினாக்களை எழுப்பினேன். அந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துகொள்ள எனக்கு உரிமை உள்ளது .இந்தஉரிமையின் அடிப்படையில் கேள்வி எழுப்பியதில் என்னதவறு என்று சாம் பித்ரோடா தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...