பூனைகுட்டி வெளியே வருகின்றது

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இதோ பூனைகுட்டி வெளியே வருகின்றது, இந்த செய்தியில் தலைமை விஞ்ஞானி சொல்லியிருக்கும் விஷயங்களை கவனியுங்கள்

இந்திய ராணுவத்திற்காக‌  436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது இது 753 கி.மீ உயரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

இதுதவிர லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான 24 செயற்கைக்கோள்கள் உட்பட 28 செயற்கைக்கோள்களும் சுமார் 505 கி.மீ உயரத்தில் விண்வெளியில் நிலை நிறுத்தப்படுகிறது.

29 செயற்கைக் கோள்களும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த உடன், ராக்கெட்டின் 4-வது நிலை வேறுபட்ட உயரத்திற்கு இயக்கப்படுகிறது.

கவனித்தீர்களா

இந்த எமிசாட்தான் இப்பொழுது துருப்பு சீட்டு 753 கிமீ உயரத்தில் அதை நிறுத்த போகின்றார்கள், பல்வேறு வகையான உளவு தகவல்களை அது அனுப்பும்

இதனை நிச்சயம் உடைக்க எதிரி நாடுகள் விரும்பும், அப்படி ஒரு கோள் இயங்க அவை விடாது

இதனால்தான் எங்களிடமும் சாட்டிலைட்டை நொறுக்கும் ஏவுகனை உண்டு என நிரூபித்து காட்டிவிட்டு எமிசாட்டினை 1ம் தேதி அனுப்புகின்றது இந்தியா

எமிசாட் உள்நாட்டு தயாரிப்பு என்றாலும் அதன் நவீனபாகங்கள் நம் தயாரிப்பு அல்ல‌..

பல வெளிநாடுகளிலிருந்து பெற்றநுட்பம் மூலம் அட்டகாசமான நவீன கோளை செய்துவிட்டோம் இவை எப்படி கிடைத்தன?

சொன்னால் திட்டுவீர்கள் ஆனால் அதுதான் உண்மை. #மோடியின் திருத்தபட்ட வெளியுறவு கொள்கையால் சில சக்திகளிடமிருந்து பெறபட்ட விஷயம் இது

சுதந்திர காலத்திற்கு பிறகு இப்போது நாட்டுக்கு எது தேவையோ அதை பெற்றுவிட்டோம்

ஏப்ரல் 1ல் எமிசாட் விண்ணில் நிலை நிறுத்தபட்டபின் அதற்கான பாதுகாப்பினை நேற்று சோதிக்கபட்ட ஏவுகனை ஏசாட் வழங்கும்

தேசம் பெரும் மைல் கல்லினை எட்டியிருக்கின்றது

ஜெய்ஹிந்த்

ஸ்டான்லி ராஜன்..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...