மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடை பெறுகிறது. இதில் போபால் தொகுதியில் பாஜக சார்பில் பிரக்யாசிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.
2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் போலியாக குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் போபால் மக்களவை தொகுதியில் போட்டி யிடுகிறார்.
வேட்புமனு தாக்கல்செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “பசுக்கள் பல இடங்களில் நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் பசுக்கள் மற்றும் பசு சார்ந்த தயாரிப்புகளில் மனிதனுக்கு நிறைய நன்மைகள் உள்ளன. அதில் பெரியவிஷயம் என்னவென்றால், மாட்டின் சிறு நீரை அருந்தியதின் மூலம்தான் எனக்கு வந்த புற்றுநோய் குணமானது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் பசு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்தி கொண்டேன்” என தெரிவித்தார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.