8 ஆண்டுகளில் தேசியளவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன

கரூர் மாவட்டம் குளித்தலையில் பாஜகசார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை குறித்து விளக்க பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கரூரில் பாஜக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என்று மாவட்டத் தலைவர் கேட்ட போது, குளித்தலையில் தான் கூட்டம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினேன். ஏனெனில் இதுவரை பாஜக கால்பதிக்காத இடங்களில், கூட்டம் சேராத இடங்களில் செய்துகாட்ட வேண்டும்.

அதற்காகதான் இப்படியொரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதுமட்டுமின்றி பாஜகவின் வளர்ச்சி இது போன்ற சிறு சிறு நகரங்களில்தான் இருக்கப் போகிறது. அதை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்றார். கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்ட உதவிகள்பலவும் குளித்தலை மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த குளித்தலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளோம்.

1957ல் குளித்தலை தொகுதியில் நடந்த இரண்டாவதுதேர்தலில் கருணாநிதி போட்டியிட்டு முதல்முறை வெற்றி பெற்றார். கொள்கைரீதியாக திமுக, பாஜகவும் நேரெதிர் கட்சிகள். இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழகமக்களுக்கு நல்லது செய்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 1957ல் இருந்த திமுகவும், 2022ல் இருந்த திமுகவும் ஒரேகட்சியா? என்றால் நிச்சயம் கிடையாது.

ஒரு குடும்பத்திற்காக கட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள். குளித்தலை தொகுதியில் ஒவ்வொருமுறையும் திமுகவிற்கு ஓட்டுபோட்டு வெற்றிபெறச் செய்திருக்கிறீர்கள். ஆனால் பின் தங்கிய தொகுதியாக குளித்தலை காட்சியளிப்பது திமுக எதுவும் செய்ய வில்லை என்பதை காட்டுகிறது. 70 ஆண்டுகள் திராவிடஆட்சி. ஆனாலும் மாற்றம் இல்லை. அதேசமயம் 8 ஆண்டுகளில் தேசியளவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...