அக்‌ஷய் குமாருடன் பிரதமர் பேட்டி

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நேற்று இரவு ஒருட்வீட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார். அதில், தேர்தலும் பிரச்சாரங்களும் உச்சகட்டத்தில் இருக்கும் போது, அரசியல் சாராத ஒரு நேர்காணலை நான் பிரதமர் மோடியிடம் நடத்தியுள்ளேன். இதுமிகவும் பெருமை கொள்ளக்கூடிய தருணம் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.  மோடியை பற்றி நீங்கள் அறிந்திடாத பல்வேறு விசயங்களை அறிந்திடநீங்கள் ஏ.என்.ஐ சேனலில் இந்தநேர்காணலை காணலாம் என்று கூறியிருந்தார்.

இந்த ட்வீட்டிற்கு முன்பு, இதற்கு முன்பு நான் அறிந்திடாத, செய்யாத ஒருசெயலில் ஈடுபட்டுள்ளேன். மகிழ்ச்சியாகவும் அதேநேரத்தில் பதட்டமாகவும் உள்ளது. இது தொடர்பான முக்கிய தகவல்களுக்கு இணைந்திருங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

 

மோடி பற்றி பலரும் அறியாத பல ருசிகர தகவல்கள் உங்களுக்காக இதோ!

நேர்காணலின் ஆரம்பத்திலேயே அதன் சாரம்சம் புரியும்படி, ஒரு பிரதமராக அல்லாமல் ஒரு தனிமனிதனாக மோடியைப் பற்றி அறிந்து கொள்ளப் போகின்றோம் என்று கூறியிருந்தார்.

நீங்கள் பிரதமர் ஆனது குறித்து ?

நான் பிரதமர்ஆவேன் என்று நினைக்கவும் இல்லை. ஒருவேலை எனக்கு நல்ல வேளை கிடைத்திருந்தால், என் அம்மாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இனிப்புகளை வழங்கியிருப்பார்.

மோடியின் குழந்தைபிராயம் குறித்து !

சிறுவயதில் நான் அருகில் இருக்கும் நூலகத்திற்கு செல்வேன். பெரிய மனிதர்கள் பற்றி அதிகம்படிப்பேன். சீருடையில் இருக்கும் நபர்கள் மதிக்கப்படுவதை நான் பார்த்திருக்கின்றேன். குஜராத்தில் இருக்கும் சய்னிக் பள்ளிப்பற்றி படித்தேன். எங்கள் ஊரில் ஒருபள்ளி பிரின்சிபல் இருந்தார். நான் அவரை நேரில் சந்தித்து பேசினேன். வாழ்க்கை குறித்து நிறைய பாடம் எடுத்தார் அவர். பின்பு நான் இமயமலை சென்றேன். என் மனதில் தோன்றியகேள்விகள் அனைத்திற்கும் பதில் தேடி அலைந்தேன்.

நான் கோபப்படுவேன் ஆனால் அதை அடுத்தவர்கள் மீது காட்டமாட்டேன் : மோடி

கோபப்படுவதும் சோகமாவதும் மனிதவாழ்க்கையில் இயல்பான ஒன்று. நான் முதல்வராக பலஆண்டுகள் பணி புரிந்திருக்கின்றேன். ஒருமுறையும் மற்றவர்கள் மீது கோபப்படும் வாய்ப்பு கிடைத்ததில்லை. என்னுடைய வேலை முடிவதற்காக நான் யாரையும் மட்டம் தட்டியதில்லை. நான் கோபப் படுவேன் ஆனால் அதை அடுத்தவர்கள் மீது காட்ட மாட்டேன். கோபப்பட்டால் என்னுடைய அலுவல் வேளைகளில் மாற்றங்கள் மட்டுமே உருவாகும்.

கோபத்தை குறைக்க என்ன செய்வீர்கள் ?

எனக்கு பிடிக்காத ஒன்று ஏதாவதுநடந்தால், நான் தனியாக அமர்ந்து ஒரு காகிதத்தில் எழுத துவங்குவேன். நான் ஏன் அப்படி நடந்தேன். என்ன நடந்தது என்று எழுதி அதை கிழித்து எறிந்திடுவேன். மீண்டும் அதைபடிக்க கூட முயற்சிக்க மாட்டேன். மீண்டும் எழுதுவேன். இப்படித்தான் என்னுடைய கோபத்தை கட்டுக்குள் கொண்டு வருவேன்.

உங்கள் அம்மாவை நீங்கள் பிரிந்திருப்பது குறித்து !

நான் பிரதமராக பதவியேற்றபின்பு வீட்டை விட்டு வெளியே வந்திருந்தால் நிச்சயமாக இந்தபிரிவு மிகவும் வருந்தக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் நான் தான் சின்ன வயதிலேயே வெளியேறிவிட்டேனே.

யாருடனும் அதிக அட்டாச்ட்டாக இருக்கக்கூடாது என்பதற்கான பயிற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். இப்போதெல்லாம் நான் என் அம்மாவை அழைபேசியில் அழைத்தால், என்னிடம் பேசி உன் நேரத்தை ஏன் வீண்செய்கின்றாய் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

நிர்வாகத்தில் கடுமையான விதிகளை பின்பற்றுபவர் என்ற பிம்பம் பொய்யானது !

நிர்வாகத்தில் கடுமையான விதிகளை பின்பற்றுபவர் என்றபிம்பம் பொய்யானது. நான் யாரையும் வேலை செய்யக்கூறி அழுத்தம் கொடுப்பதில்லை. முன்பெல்லாம் நாட்டின் பிரதமர் 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியேறிவிடுவார்.

ஆனால் நான் அதிகாலையில் அலுவலகத்திற்கு வந்தால் நள்ளிரவு வரை அங்கேதான் இருப்பேன். நான் வேலை செய்வதை பார்த்து மற்றவர்களும் வேலை செய்வார்கள். இந்த மாண்பினை கட்டாயப்படுத்தி மக்களிடம் திணிக்க இயலாது. நான் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றேன்.

நான் எந்த ஒரு பெரிய அதிகாரிகள் அல்லது நபர்களுடனும் பேச தயங்கியது கிடையாது. சிறு வயது முதலே கூச்ச சுவபாவம் என்பது எனக்கு இருந்ததில்லை. யாரிடமும், எதைப்பற்றியும் தைரியமாக பேசுவேன்.

எதிர்கட்சியில் எனக்கு நண்பர்களும் உண்டு – மோடி

எனக்கு எதிர்கட்சியிலும் நண்பர்கள் உண்டு. நான் அவர்களுடன் வருடத்திற்கு ஒரு முறையாவது மதிய உணவு உண்பது வழக்கம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. தேர்தல்நேரத்தில் கொஞ்சம் நெருக்கடியான உணர்வுகளை இது தரும்.

இருந்தாலும், மம்தா பானர்ஜீ எனக்கு வருடத்திற்கு ஒருமுறை குர்த்தா வாங்கி அனுப்புவார். வங்கதேச பிரதமர் எனக்கு பெங்காலி இனிப்புகளை அனுப்புவார் என்று மோடி கூறியுள்ளார்.

முதல்வராக இருந்த போது சம்பாதித்த சம்பளப் பணத்தை என்ன செய்தீர்கள் ?

நான் முதல்வராக பொறுப்பேற்றபோது என்னுடைய வங்கிக் கணக்கு வழக்குகளை என்னுடைய நிர்வாகி ஒருவர் நிர்வகித்தார். நான் பிரதமராக பொறுப்பேற்ற போது என்னுடைய சம்பள பணம் 21 லட்சத்தினை தலைமைச் செயலகத்தில் வேலைபார்த்து வந்த ப்யூன் மற்றும் ட்ரைவரின் மகள்களின் படிப்பிற்காக கொடுத்துவிட்டேன்.

நீங்கள் உண்மையாகவே குஜராத்தி தானா ?

இந்த கேள்வியை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தார் மோடி. ஏன் என்றால் குஜராத்திகள் அவர்களின் பணத்தை பாதுகாப்பதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று அக்‌ஷய்கூற பலமாக சிரித்தார் மோடி.

அலாவுதீனின் அற்புத விளக்கு உங்களுக்கு கிடைத்தால் ?

கல்வியாளர்களிடம் வருங்காலத்தில் அலாவுதீனின் அற்புதவிளக்கு குறித்த பாடங்களை எடுக்கக்கூடாது என்றும், மாணவர்களுக்கு கடுமையாக உழைக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த கேள்விக்கு பதில் அளித்தார் மோடி.

பிரதமராக டெல்லி வரும் போது, குஜராத்தில் இருந்து நீங்கள் எடுத்துவந்த மதிப்புமிக்க பொருள் ?

மற்ற பிரதமர்கள் போல் அல்லாமல் நான்மிகவும் சிறப்புமிக்க ஒன்றை எடுத்துவந்தேன். அது என்னுடைய முதலமைச்சர் அலுவலகம் கொடுத்த அனுபவம்.

பாரக் ஒபாமாகூட உங்களின் தூக்கம் குறித்து அதிக கவலை கொள்கின்றார்!

நான் நாள் ஒன்றிற்கு 3ல் இருந்து மூன்றரை மணிநேரம் மட்டுமே தூங்குவேன். என்னுடைய உடல் இதற்கு பழகிவிட்டது. ஒபாமா என்னுடைய நல்ல நண்பர். அவர் என்னிடம் “ஏன் இவ்வளவு குறைவான நேரம்மட்டுமே ஓய்வெடுக் கின்றீர்கள்! உங்களின் வேலை மீது நீங்கள் கொண்டுள்ள பற்று எங்களுக்கு புரிகின்றது. இருப்பினும் நீங்கள் குறைவான நேரம் துங்கக்கூடாது என்று கூறினார்” என்றார் மோடி.

நான் ஆயுர்வேதத்தை அதிகம் நம்புகின்றேன் !

அதிகவிலையுள்ள மருந்துகள் எப்படி வேலைசெய்யும் என்று எனக்கு தெரியாது. நான் ஆயுர்வேதத்தை நம்புகின்றேன். சுடுதண்ணீர் மட்டுமே குடிப்பேன். உடல்நிலை சரியில்லாமல் போனால் உணவுஅருந்த மாட்டேன். சர்சோ க டெல் இரண்டுசொட்டினை மூக்கில் விடுவேன். அது என்னுடைய காய்ச்சலை சரியாக்கிவிடும்.

மோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்

 

என் இளமைக் காலங்களில் தோளில் ஒரு ஜோல்னா பை சுமந்து செல்வேன். அதில், எனக்கு தேவையான இரண்டு அல்லது மூன்று துணிகள் இருக்கும் அவ்வளவுதான். அதுவும் அரைக்கை சட்டையாக இருந்தால், அதைதுவைக்கவும், அயர்ன் செய்யவும் வசதியாக இருக்கும்.

என்னுடைய ஆடைகுறித்தும் ஆங்காங்கே தவறான செய்திகள் வருகின்றன. பாெதுவாக, தோற்றத்தில் கம்பீரத்தை காெண்டு வந்தால், நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் சிதறி ஓடிவிடும். தாழ்வு மனப்பான்மைவராது. அதற்காகவே, அந்தக்காலங்களில், எங்கள் வீட்டில் இருக்கும் ஒருபாத்திரத்தில், மரத்துண்டுகளால் ஆன நெருப்பை போட்டு, என் துணிகளை அயர்ன் செய்து அணிந்து கொள்வேன். இது என் தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்தது.

நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பணம் அனுப்பவது குறித்து !

இன்றுவரை என் அம்மா தான் எனக்கு பணம் அனுப்பி வருகிறார். அவருக்கு அதிகசெலவுக்கான தேவைகள் இருப்பதில்லை . என்னிடம் இருந்து அவர் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. நான் என்னுடைய நாட்டையே குடும்பமாக ஏற்றுக்கொண்டேன். அதனுடைய முன்னேற்றத்திற்காக தான் பாடுபடவிரும்புகின்றேன்.

பிடித்த விளையாட்டு

தனிநபராக விளையாடாமல் குழுவாக விளையாடுவதுதான் எனக்கு பிடிக்கும். ஏன் என்றால் அந்தகுழு உங்களின் தனிநபர் வளர்ச்சிக்கு அதிக பங்காற்றும். கில்லிதண்டா விளையாடியுள்ளேன். என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் துணியையும் துவைத்துள்ளேன். அருகில் உள்ள கிணத்தில் நீச்சல் அடிப்பேன்.

சர்வதேச அரங்கில் பேசிய முதல்உரை குறித்து !

நான் அமெரிக்கா சென்றிருந்த போது சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் உரையாற்றக்கூறினார். நான் என்னிடம் எழுதப்பட்ட உரை எதுவும் இல்லை என்றேன். பின்பு நான் என்னபேச விரும்புகின்றேன் என்று கூறினேன். அவர் அதனை எழுதிக் கொடுத்தார்.

திரைப்படங்கள் பார்ப்பதற்கு நேரம் இல்லை

என்னுடைய கிராமத்தில் நான் நிறையபடம் பார்த்துள்ளேன். குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அமிதாப்புடன் பா படமும், அனுப்பம் கேருடன் ஏ வெனஸ்டே படமும் பார்த்தேன். தற்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கு எனக்கு நேரம்இல்லை.

மன அமைதி பெற என்ன செய்வீர்கள் !

முன்பெல்லாம் சிலபழக்கங்கள் எனக்கு இருந்தன. ஆனால் தற்போது அதைசெய்வதற்கு எனக்கு நேரம் இல்லை. காலையிலும் மாலையிலும் தேநீர் அருந்துவேன். வெளிச்சமான அறையில் அமர்ந்திருப்பேன். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வெளியுலக இணைப்பு ஏதும் இல்லாமல் எங்காவது சென்றூவருவேன். ஓய்வு பெற்றபின்பு இதை நான் மீண்டும் தொடர்வேன் என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...