அத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி

அத்வானி போன்ற தலை வர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி சாதகமாகி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிபெற்று பிரதமராக மோடி மீண்டும் விரைவில் பதவி ஏற்க உள்ளார். அவர் இன்று பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷியை அவர்களது வீட்டில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் சந்தித்து ஆசிபெற்றனர்.

அத்வானியை சந்தித்தபின்னர் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: மரியாதைக் குரிய அத்வானியை சந்தித்தேன். பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றிக்கு, பல ஆண்டுகளாக அத்வானி போன்ற தலைவர்கள் கட்சியை கட்டமைத்ததும், மக்களுக்கு புதியகொள்கைகளை அளித்ததுமே காரணம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தபின்னர் மோடி வெளியிட்ட அறிக்கை:

டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, அறிஞர், நன்கு படித்தவர். இந்திய கல்வியை மேம்படுத் துவதில் அவரின் பங்களிப்பு முக்கியமானது. அவர் எப்போதும், பா.ஜ.,வை பலப்படுத்த பணி யாற்றினார். என்னை போன்ற ஏராளமான தொண்டர்களுக்கு முன் மாதிரியாக இருந்தார். இன்று காலை அவரை சந்தித்து ஆசிபெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

லோக் சபா இதுவரை இல்லாத வெற்றியை, பா.ஜ.,வுக்கு பெற்றுத் தந்த, பிரதமர், மோடி மற்றும் கட்சித் தலைவர், அமித் ஷாவுக்கு, அத்வானி பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கை:நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு இதுவரை இல்லாதவகையில், அமோக வெற்றி பெற்றுத்தந்த, பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., தலைவர் அமித்ஷா தலைமையில், அயராது பாடுபட்ட, கட்சித் தொண்டர்களுக்கும் என் நன்றி.நம் சிறந்தநாடு, வருங்காலத்தில் பிரகாசமான எதிர்காலத்தைப் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு, அத்வானி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...