பிரீப்கேஸ் பைக்கு பதில் பட்டுத்துணி பை

மத்திய அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண் நிதிஅமைச்சர் என்ற பெருமையை, நிர்மலா சீதாராமன், 59, பெற்றுள்ளார்.

கடந்த, 1970ல், 1970 – 71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, காங்.,கின் இந்திரா தாக்கல்செய்தார். நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து மொரார்ஜி தேசாய் பதவி விலகியதால், பிரதமராக இருந்த இந்திரா அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதுவரை, அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை, மொரார்ஜி தேசாய்க்கு உள்ளது; அவர், 10 முறை பட்ஜெட் தாக்கல்செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான நிர்மலா சீதாராமன், ஹிந்தியில் சிலவார்த்தைகளை பேசியபோது, ஆளும் தரப்பினர், மேஜையைத்தட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பட்ஜெட் தாக்கலின்போது, ஆளும்தரப்பு நிரம்பிவழிந்தது.

ராகுலின் தாயான, சோனியா, தன்பர்ஸை மறந்துவிட்டு சென்றுவிட்டார். அதை, ராகுல் எடுத்துச்சென்றார்.

புதிய மரபுவழக்கமாக பட்ஜெட் தாக்கல்செய்யும் நிதி அமைச்சர்கள், ஒரு ‘பிரீப்கேசில்’ பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வருவர். அதை கைவிட்டு, நம் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், சிவப்புநிற, பட்டுத்துணி பைக்குள் ஆவணங்களை வைத்து, நிர்மலா எடுத்துவந்தார். அந்த பையின் மீது, அசோக சின்னமும் இருந்தது.வியாபாரம் செய்வோர், தங்களுடைய வரவு – செலவுகணக்கு புத்தகத்தை, ஒரு பட்டுத்துணியில் வைத்து, பூஜை செய்து, கணக்கை துவக்குவர். இதை, ஹிந்தியில், ‘பாஹி காதா’ என்று கூறுவர். அதை உணர்த்தும் வகையில், பட்ஜெட் ஆவணங்களை, பட்டுத்துணி பையில் வைத்து கொண்டுவந்தார் நிர்மலா.

‘பிரீப்கேஸில் ஆவணங்களை கொண்டுவருவது என்பது, காலனி ஆதிக்கத்தை உணர்த்துகிறது. அதனால்தான், நம் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், பட்டுத்துணி பையில் கொண்டு வந்தார்’ என, நிதி அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...