இனி காஷ்மீர் முன்னேறும்!

370 தாவது சட்டப் பிரிவு வாயிலாக காஷ்மீருக்கு 1954 ல் தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் காரணமாக, காஷ்மீரில் ஒரு கல்வி நிறுவனமோ, மருத்துவமனையோ, தொழிற்சாலையோ நிறுவ முடியவில்லை!

காரணம் எந்த நிறுவனத்திற்கும் அங்கு நிலம் வாங்க முடியாது!, நிலம் வாங்க முடியாதென்றால், எப்படி முதலீடு செய்வார்கள்? அன்னிய முதலீட்டை ஈர்க்க முடியவில்லை! உள்ளூர் மக்கள் மட்டுமே முத்லீடு செய்துக்கொள்ளலாம் என்றால், எந்த அளவுக்கு முதலீடு செய்திடமுடியும்?

எனவே எத்தகைய பெரிய நிறுவனமும் அங்கு துவங்கிடமுடியவில்லை! எனவே யாருக்கும் வேலை இல்லை! யாருக்கும் வேலை இல்லை என்றால் போராட்டக்காரர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் கொண்டாட்டம்தான்!

(தமிழகத்திலும் இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான் திமுக தலைமையில் இப்போது போராட்டக் காரர்கள் முயலுகிறார்கள்!)

காரணம் வேலை இல்லை என்றால்தான், கல்லடிக்கவும், கத்தி எடுக்கவும், துப்பாக்கி தூக்கவும், தலையை எடுக்கவும், கைகால் எடுக்கவும், குண்டு வைக்கவும் ஆட்கள் கிடைப்பார்கள்! இது பாகிஸ்தான் பயங்கர வாதிகளுக்கு கொண்டாட்டம்!

நாட்டை முன்னேற்ற நாடாளுமன்றம் எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் அது காஷ்மீர் சிறப்பு சட்டத்தின்படி காஷ்மீரில் மட்டும் செல்லுபடி ஆகாது! எனவே மத்திய அரசு நினைத்தாலும் 370 தாவது சட்டதிருத்தம் இருக்கும் வரை, காஷ்மீர் மாநில மக்களை முன்னேற்ற முடியாது!

காஷ்மீர் ஒரு சுடுக்காடாக, பொட்டைக்காடாக, படிப்பறிவு இல்லாத, பழமைவாதம் நிறைந்த இளைஞர்கள் நிறைந்த பயங்கரவாத பூமியாக இருந்தது!

இப்படி இருப்பதுதான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், இவர்கள் இருவர்களிடமும் லஞ்சம் வாங்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் நாட்டில் உள்ள இதர பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சொர்க்க பூமியாக இருந்தது!

மொத்தத்தில் 1954 ல் தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட 370 தாவது சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீரின் முட்டுக்கட்டையாக விழங்கியது! ஜம்மு காஷ்மீர் மக்களின் நலன் கருதி அந்த முட்டுக்கட்டை 2019 ஆகஸ்ட் 5 ம் தேதி நீக்கப்பட்டுள்ளது!

இந்த ஆகஸ்ட் 5 தான் இந்தியாவின் உண்மையான சுதந்திரமாகும்!

இனி காஷ்மீர் முன்னேற்றப்பாதையில் அடி எடுத்துவைக்கும்!

– குமரிகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...