திஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடிவழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார்சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

ஐ.என்எக்ஸ் மீடியா மோசடிவழக்கில், சிதம்பரம், திஹார் சிறை செல்வதை தடுக்கும் பொருட்டு, அவரது வழக்கறிஞர் குழுவினர் தீவிரமுயற்சி செய்தனர். இதற்காக, சிதம்பரம் அமலாக்கத்துறை கஸ்டடிக்குசெல்ல தயாராக உள்ளதாகவும் நீதிபதி முறையிட்டனர்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்வதை தடுக்கும்பொருட்டு சிதம்பரம் தாக்கல்செய்த முன்ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, எந்தநேரத்திலும், அவரை அமலாக்கத்துறை கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை, கைதுசெய்வதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், சிறப்பு கோர்ட் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னால், இரண்டுவாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, ஜாமினில் விடுவது அல்லது நீதிமன்ற காவலில் வைப்பது .

ஆனால், சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், ” வழக்கின் தன்மையை கருத்தில்கொண்டும், குற்றத்தின் வகையை ஆராய்ந்தும், ஆரம்பகட்ட நிலையில் விசாரணை உள்ளதால், குற்றவாளியை நீதிமன்ற காவலில்வைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

உடனடியாக, சிதம்பரம் தரப்பினர், பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரம்,திஹார் சிறைக்கு கண்ணாடியை கொண்டுசெல்லவும், குறிப்பிட்ட மருத்துவ வசதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னாள் உள்துறை அமைச்சரான சிதம்பரத்திற்கு, பாதுகாப்பை கருத்தில்கொண்டு கழிப்பறையுடன் கூடிய தனி அறையை ஒதுகக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளை நீதிபதி ஏற்றுகொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்� ...

படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்போம் – ஜெய்சங்கர் மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்து வரும், 'வேவ்ஸ்' எனப்படும், சர்வதேச ...

சந்திர பாபு நாயுடுவின் திட்டங்� ...

சந்திர பாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்துக் கற்றுகொண்டேன் – பிரதமர் மோடி ஆந்திரா மாநிலம் அமராவதியில் நடந்த அரசு விழாவில், 58 ...

போர் விமானங்களை விரைவு சாலைகளி� ...

போர் விமானங்களை விரைவு சாலைகளில் தரையிறக்கி ஒத்திகை பஹல்காம் தாக்குதலுக்குபிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை விரைவு ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.