370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசிய லமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டுள்ளதை அந்தமாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.  அங்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும்,  தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மாவட்ட பாஜக சார்பில் மக்கள் சந்திப்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் கே.ஜெகநாதன் கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.  அதைத் தொடர்ந்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநில தலைவருமான இல.கணேசன்  சிறப்புரையாற்றி யதாவது: காஷ்மீர் மாநில சிறப்புஅந்தஸ்து பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது, பாஜக ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கூறிவந்தது தான்.  தற்போது பாஜக 2-ஆவது முறையாக பொறுப்பேற்றவுடன், ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி,  மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதலோடுதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதில் எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல்,  ஜனநாயகம் மீறும் செயல் அல்ல.

காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்,  யார் ஒப்புதலும் இல்லாமல்,  ஜனநாயகத்துக்கு விரோதமாக தன்னிச்சையாக அவசர நிலை பிரகடனம் இரவோடு இரவாகச் செய்யப்பட்டது.  இதனால் ஜனநாயகம் குறித்துபேசும் தகுதி காங்கிரஸூக்கு இல்லை. மேலும், நாட்டில் லஞ்ச ஊழல் எந்த உருவிலும் இருக்கக்கூடாது என்று தான்,  அனைவருக்கும் வங்கி எண், ஆதார் அட்டை, பான்கார்டு கொண்டு வரப்பட்டுள்ளது.  தற்போது ஒரே அட்டை  கொண்டுவரும் திட்டமும் உள்ளது. இதனால் ஊழல் தடுக்கப்படும் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம்  இல.கணேசன் பேசியது:  ஜம்முகாஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.  இதனால் காஷ்மீரில் சில பிரச்னைகள் இருந்தாலும்,  காலப்போக்கில் அது நீங்கிவிடும். தற்போது பொருளாதார சீரமைப்புகளை நோக்கியே நிதி அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.    பெரியதொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறு-குறு தொழில்கள் வளர்ச்சிக்கும் மத்தியஅரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது.  அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.  அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக -பாஜக கூட்டணி போட்டியிடும் என்றார் இல.கணேசன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...