பாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்

மகாராஷ்டிரா  சட்ட சபை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா நடுவே தொகுதிப்பங்கீடு இன்று இறுதிசெய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவ சேனாவை ஒப்பிட்டால், பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அக்டோபர் 21ம் தேதி நடக்க உள்ள இந்ததேர்தலில், பாஜக, சிவசேனா மற்றும் சிலகட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று, மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தொகுதிபங்கீடு தொடர்பான விவரத்தை வெளியிட்டனர்.

இதன்படி பாஜக 148 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. சிவசேனா 126 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. “இருகட்சிகள் நடுவேயும் சில வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் கூட இந்துத்துவா என்ற ஒற்றை நூலில் இவ்விரு கட்சிகளும் இணைந்துள்ளன” என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

யார் பெரியவர், யார் அண்ணன், யார் தம்பி என்று விவாதித்துக் கொண்டிருப்பதைவிட, நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோம் என்று சொல்வதுதான் முக்கியமானது. நாங்கள் சகோதரர்களாக இணைந்து செயல்படுவோம்” என்றார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...