5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசின் 53.29 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கவும், பங்குகளைவாங்கும் நிறுவனத்துக்கே நிறுவனத்தின் நிர்வாக உரிமையை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல, இந்திய கப்பல்கழகம், இந்திய கன்டெய்னர் கழகம், டெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம், வட கிழக்கு மின்சக்தி கழகம் ஆகியவற்றின் பங்குகளுடன், அதன் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை செய்தியாளர்களிடம்பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.

குறிப்பிட்ட சில பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குத்தொகையை 51 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க இசைவு தெரிவிக்கப் பட்டது. எனினும், நிர்வாககட்டுப்பாடு மத்திய அரசிடமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் உணவுத்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெங்காயத்தை தனியார் இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கவும் முடிவுசெய்யப்பட்டது.

அலைவரிசைக்கான கட்டணத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க முடிவு செய்யப் பட்டது. இதன்படி, 2020-21, 2021-22-ம் ஆண்டுகளில் செலுத்தவேண்டிய 42 ஆயிரம் கோடி ரூபாயை தாமதமாக செலுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் பயனடையும்.

தொழில் துறை நல்லுறவுக்கான விதிகள் மசோதாவை அறிமுகம்செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் சட்ட விரோதமாக உள்ள ஆயிரத்து 731 குடியிருப்புகளை அங்கீகரிக்கும் வகையிலான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இசைவு தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், 40 லட்சம்பேர் பலன் பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...