முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை

முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை , அரசின் வழிகாட்டுதல்படிதான் செயல்படுவோம் என முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் கூறியுள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத் இன்று (ஜன.,1) பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக அவர். டில்லியில் உள்ள தேசியபோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது, ராணுவதளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா, கடற்படைதளபதி கரம்பிர் சிங் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் பிபின் ராவத் கூறுகையில், முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கும். அரசியல் எங்களுக்குவேண்டாம். அரசின் வழிகாட்டுதல் படி மட்டுமே செயல்படுவோம். முப்படைகளையும் ஒருங்கிணைத்து ஒரேஅணியாக செயல்பட தலைமை தளபதியாக கவனம் செலுத்துவேன். முப்படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆக்கப் பூர்வமாக பயன் படுத்த முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு வாழ்த்துதெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த புதிய ஆண்டு துவங்கும்போது, இந்தியாவிற்கு முதல் முப்படை தலைமைதளபதி கிடைத்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மிகப்பெரிய பொறுப்பு கிடைத்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மிகுந்த ஆர்வத்துடன், இந்தியாவுக்காக உழைத்த சிறந்தஅதிகாரி என தெரிவித்துள்ளார்.

யார் இந்த பிபின் ராவத்?

2016-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31-ம் தேதியன்று, இந்திய ராணு வத்தின் 27-வது தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட்டார் பிபின் ராவத். தலைமை தளபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணை தலைமை தளபதியாகப் பணியாற்றிவந்தார். உத்தரகாண்ட்டில் பிறந்த பிபின் ராவத்தின் குடும்பம், பலதலைமுறைகளாகத் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றுகிறது. டெஹ்ராடூன், சிம்லா, தமிழகத்தின் வெலிங்டன் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்ற பிபின் ராவத், அமெரிக்காவில் ராணுவம் குறித்த பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

தனது தந்தை பணியாற்றிய அதே படையில், 1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார் பிபின் ராவத். உயர்ந்த மலைகளின்மீது போர் புரிதலிலும், ஆட்சிக்கு எதிரான ஆயுதக் குழுக்களை ஒடுக்குவதிலும் கை தேர்ந்தவர், இவர். நாடு முழுவதும் பல்வேறு ராணுவப் படைகளுக்குத் தலைமை தாங்கியதோடு, ராணுவம் குறித்த கல்வியில் ஆர்வம்கொண்டவர். ராணுவ போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011-ம் ஆண்டு, மீரட்டிலுள்ள சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்பெற்றார், பிபின்.

2008-ம் ஆண்டு, காங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக் குழுவில், இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகச் சென்றார். அவரது தலைமையின் கீழ் அமைதிக் குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டதாகவும், அதுவரை அமைதியாக இருந்த இந்தியாவின் அணுகுமுறை, அவரின் தலைமைக்குப் பின் இரும்புக்கரம் கொண்டதாக மாறியதாகவும் அந்த அமைதிக்குழுவில் இருந்தவர்கள் அவரைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...