எப்படி ஆட்சி செய்வது என்று சிவசேனாவுக்கு தெரியாது

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 35 பேர் கட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான நாராயண்ரானே கூறியுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யான ரானே, உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு செயலற்ற தன்மையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அரசை நிர்ணயிக்க சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ்கட்சிகள் 5 வாரத்திற்கும் அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொண்டதை ரானே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

மகாராஷ்டிராவில் பாஜக எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும். பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிவசேனாவில் 56 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அவர்களில் 35 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

உத்தவ் அறிவித்துள்ள விவசாயகடன் தள்ளுபடி என்பது ஒருமாயை, எப்போதைக்குள் அந்ததிட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எந்த விளக்கமும் இல்லை/,

அவுரங்காபாத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வந்துசென்றுள்ளார். ஆனால் அந்த பகுதிக்கு எந்தவொரு திட்டத்தையும் அவர் அறிவிக்கவில்லை..

இதுபோன்ற அரசிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?. எப்படி ஆட்சிசெய்வது என்று சிவசேனாவுக்கு தெரியாது. ஆட்சியமைக்கவே அவர்கள் 5 வாரத்திற்கும் அதிகமான நாட்களை எடுத்து கொண்டார்கள். இதிலிருந்தே அவர்கள் எப்படி ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

ராஜ் தாக்கரே பாஜகவில் சேர்கிறாரா என்ற பேச்சு எழுகிறது. இதுபற்றி  பாஜக  தலைவர்தான் முடிவு  செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...