விவசாயத் துறைகளை ஊக்குவிக்கும் பட்ஜெட்

விவசாயத் துறைகளை ஊக்குவிக்கும்  16 அம்ச திட்டங்களை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். அப்போது அவர் தனது உரையை தொடங்கினார்.

விவசாயத்துறை ஊக்கத்திற்கு 16 அம்ச திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். அவர் கூறுகையில்

விவசாயிகளுக்கு கடன்வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

விவசாயத் துறைக்கு பட்ஜெட்டில் 2.83 லட்சம்கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஊரக மேம்பாட்டிற்காக ரூ 1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

கடந்த பட்ஜெட்டைவிட இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ 12,955 கோடி அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

பிரதமர் கூசும் திட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய்க்காக மற்றநாட்டை சார்ந்திருக்கும் நிலை கைவிடப்பட்டு சூரியசக்தி மின்சாரம் பயன்படுத்தப்படும். சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்யப்படும்.

உரங்களை சீரானமுறையில் பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவிக்கும். ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் உரங்களை சீரானமுறையில் பயன்படுத்துவது முக்கியமானதாகும்.

விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷிஉடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச்செல்ல வசதி ஏற்படுத்தப்படும் –

2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டுமடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டுசெல்ல தனி ரயில்கள் இயக்கப்படும்.

ஆடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு அடிபாதத்திலும் வாயிலும் ஏற்படும் நோயை 2025-இல் ஒழிப்பதே இந்த அரசின்நோக்கம்.

2025-ஆம் ஆண்டில் 53.5 மில்லியன் மெட்ரிக்டன் பால் உற்பத்தியை 103 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும்.

விவசாய கிடங்குகள், குளிர்சாதன சேமிப்பு மற்றும் பிற பொருள்களின் சேமிப்பகங்களை மேப்பிங், ஜியோ டேக்கிங் செய்வதற்கான முயற்சியை நபார்டு மேற்கொள்ளும்.

கிராம சேமிப்பக திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இது முழுக்கமுழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை அதிகளவில் சேமிக்க உதவும். தளவாட பொருட்களின் செலவை குறைக்கும். இதற்கு அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் முழு பொறுப்பேற்பர்.

விளைப் பொருட்களைக் கொண்ட தோட்டக் கலைத்துறை உணவு தானியங்களின் உற்பத்தியை தாண்டுகிறது. எனவே ஒரு உற்பத்தி, ஒருமாவட்டம் என்ற வகையில் கொண்டுசெல்வோம்.

மீன் வளத் துறையில் இளைஞர்களை இந்தஅரசு ஈடுபடுத்தும். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சாகர் மித்ராக்கள் போல் பணியாற்றுவர் என நம்புகிறோம். அதுபோல் மீன் பண்ணை நிறுவனமும் தொடங்கப்படும் உள்ளிட்ட திட்டங்களை நிர்மலா அறிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...