ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் குறித்து ஜே.பி.சி. அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு மற்றும் ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் பார்லிமென்ட் கூட்டுக்குழு, விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் -பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி பார்லிமென்ட் கூட்டுக்குழு, விசாரணையை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் சுதீப் பண்டோபாத்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக துணை நிற்போம். அதேநேரத்தில், பார்லிமென்டை சுமுகமாக நடத்த, ஜே.பி.சி., விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ யான கேட்டு கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . சட்டசபை தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் எதிரோளிக்கும் என திரிணமுல் காங்கிரஸ் கருதுகிறது.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.