மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது என கட்சியின் தேசிய தலைவர் ஜேபி. நட்டா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், அடுத்த தேர்தல்களில் பாஜக தனித்தும், பிறகட்சிகள் ஓரணியிலும் போட்டியிடும் என்றார். அடுத்த தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக மாபெரும் வெற்றிபெறும் என்று கூறிய நட்டா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி நம்பகத்தகாத, இயற்கைக்கு மாறான கூட்டணி என்றும், மராத்தியபேரரசர் சிவாஜியையும், வீர சவார்க்கரையும் அவமதிக்கும் சம்பவங்கள் அதிகரித்த போதிலும், அதை காணாதது போல முதலமைச்சர் உத்தவ்தாக்கரே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
சித்தாந்த விவகாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பாஜக நிலைப் பாட்டை மாற்றியதில்லை எனவும், திருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை எனவும் நட்டா கூறினார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |