தெற்கு கரோலினா நகரில் நடந்தகூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசியதாவது: சமீபத்தில் இந்தியாவில் பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமர் மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர். அதேபோல், அமெரிக்கா மீதும், அமெரிக்கர்கள் மீதும் அன்பு கொண்டுள்ளனர். இந்தியாவில், உண்மையில், 129,000 பேர் என்னை பார்க்கவந்தனர். அதை நீங்கள் பார்த்தீர்களா? அந்த இடம் முழுவதும் நிரம்பியிருந்தது. இதன்மூலம் ஒருலட்சம் மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். அது பெரிய கூட்டம். இந்தகூட்டத்தை பார்த்து எங்களுக்கு ஒரேநெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், போய்வந்த பிறகு, இங்கே கூட்டத்தை பார்த்தேன். பொதுவாக நான்பேசும் கூட்டத்தை பற்றிசொன்னால், அங்கு ஒப்பிடும் போது எனக்கு பெரிய கூட்டம் வருவது கிடையாது.
ஒருகூட்டத்திற்கு 140 அல்லது 50 அல்லது 50 ஆயிரம் பேர்தான் அதிகபட்சமாக வருகின்றனர். இந்தியா சென்று வந்தபிறகு அதுபோன்ற ஒருமக்கள் கூட்டத்தை இனி பார்க்கபோவது இல்லை. இந்தியாவில் 150 கோடி பேர் உள்ளனர். நான் இந்தகூட்டத்தை நேசிக்கிறேன். அந்த கூட்டத்தையும் நேசிக்கிறேன். இந்தியாவில் சிறந்த தலைவர் உள்ளார். இந்த நாட்டின் மீதும் அந்நாட்டு மக்கள் அன்பு செலுத்துகின்றனர். இந்தியபயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |