ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகிய ஜோதிராதித்ய சிந்தியா புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால், அதிருப்தி காரணமாக கட்சியில்இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ஜோதிராதித்ய சிந்தியா விலகியதை அடுத்து, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமா்ந்துள்ள காங்கிரஸுக்கு 15 மாதங்களிலேயே நெருக்கடி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள இரு இடங்கள் தவிா்த்து, மொத்த உறுப்பினா்களின் பலம் 228 ஆகும். 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததை அடுத்து, பேரவையின் பலம் 206-ஆக உள்ளது. தற்போதைய நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸுக்கு ஆதரவாக 99 உறுப்பினா்களே (கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் உள்பட) உள்ளனா். ஆனால் பாஜகவிடம் 107 உறுப்பினா்கள் உள்ளனா்.

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சா்பதவி வழங்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மத்தியப்பிரதேச காங்கிரஸில் தன்னை ஒதுக்கும் விதமாக முதல்வா் கமல்நாத் மற்றும் மூத்த தலைவா் திக்விஜய்சிங் ஆகியோா் இணைந்து செயல்படுவதாக ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகினார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 26-ஆம் தேதி 3 இடங்களுக்கான மாநிலங்களவை தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலா ஒருஇடத்தில் வெற்றி உறுதியாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நகா்வுகளால் 3-ஆவது இடத்தையும் பாஜக கைப்பற்றலாம் எனத் தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...