நரேந்திர மோடியின் கொள்கையின் மீது கொண்ட ஈர்ப்பால் பாஜகவில் இணைந்தேன்

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைமீது கொண்ட ஈடுபாட்டினால் பாஜகவில் இணைந்ததாக பிரபலமல்யுத்த வீரர் தலீப் சிங் ரானா (தி கிரேட் காளி) இன்று (திங்கள் கிழமை) மனம் திறந்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்கை தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தபின்பு இதனை அவர் தெரிவித்தார்.

அமைச்சரை சந்தித்தபின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “ நான் அமைச்சர் ஜிதேந்தர் சிங்கை சந்திப் பதற்காக வந்தேன். அவரும் என்னைப்போல மலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர். அதன் காரணத்தினால் அவரைப் பார்க்க வந்தேன். இதுஒரு சாதாரண சந்திப்புதான்” என்றார்.

பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு அவர், “நான்பாஜகவில் இணைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். பிரதமர் நரேந்திரமோடியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டுதான் பாஜகவில் இணைந்தேன்” என்றார்.

மத்திய அமைச்சருடனான இந்தசந்திப்பு பாஜகவில் அவர் இணைந்து 3 மாதங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் வாரம் ஜிதேந்திர சிங், மாநிலங்களவை உறுப்பினர் அருண்சிங், மக்களவை உறுப்பினர் சுனிதா துக்கல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தி கிரேட் காளி மல்யுத்த போட்டியில் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். அவர் மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களான ஜான் சீனா, பட்டிஸ்டா, ஷான் மைக்கேல்ஸ் போன்றவர்களுடன் சண்டையிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...