இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறதா?

நாட்டுப்பற்று இல்லாத ஒருசில ஜந்துகள், எப்போதும் அரசாங்கத்தை குறை கூறி நாட்டை பிரிவினை வாதம் செய்வதே வேலை. இதோ கிளம்பி விட்டார்கள் இந்த பித்தலாட்டக்காரர்கள்.

இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறது என்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துவருகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சபடுகின்றனர். உடனே அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக 52 மையங்களில் கொரோனா டெஸ்ட் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.(டெஸ்ட்மட்டுமே இந்த மையங்களில் இரத்த மாதிரி-blood samples நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெறுப்படும்)

இவை இல்லாமல் புதிதாக 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் நடத்த மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்த பன்னிரண்டு லேப்களும் முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.1,500ம், உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு ரூ.3,000ம் அதிகபட்சமாக ரூபா 4500 வசூலிக்கலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.முடிந்த வரை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உண்மையை அப்படியே திரித்து இந்தியாவில் கொரோனா டெஸ்ட் க்கு 4500 ரூபாய் என்று புரளி கிளப்பி வருகிறது ஒரு கூட்டம்.

இவர்களின் இச்செயலால் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் கூட 4500 செலவாகுமே என்று செய்யாமல் இருக்கப்போகிறான்..

மக்களே வதந்திகளை நம்பாதீர்கள்,
நோய் அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

எல்லோரும் நலமுடன் வளமுடன்
இவ்வுலகில் வாழ
எம் ஈசன் காப்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...