1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரணம்

கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.

இந்த பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின்கீழ் நேரடி பணப் பரிமாற்றங்களும் உண்டாம். அதோடு ஒவ்வொரு சுகாதாரத்துறை பணியாளருக்கும் (Health workers) 50 லட்சம் ரூபாய் வரைக்குமான மருத்துவ இன்சூரன்ஸ் வழங்ககிறார்கள் .

சுமார் 80 கோடி மக்கள் இந்த பிரதான்மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் வருவார்களாம். இந்ததிட்டத்தின் கீழ் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க இருக்கிறார்கள். இது வழக்கமாக வழங்கப்படும் ரேஷன்பொருட்கள் இல்லாமல் கூடுதலாக வழங்கப்படுவது.

இதுபோக பிரதான் மந்திரி கரீப்கல்யான் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஏதாவது ஒருவகை பருப்பும் ஒரு கிலோ, அடுத்த 3 மாதங்களுக்கு கிடைக்கும். இவைகளை இரண்டு தவணைகளாக திட்டத்தின்கீழ் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் முதுகு எலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான்திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது முதல்தவணையை கொடுக்க படுகிறது.  இதனால் சுமாராக 8.69 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இருக்கும் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு அரசுவழங்கும் கூலியை உயர்த்தி இருக்கிறார்கள் . இதனால் இந்த திட்டத்தின்கீழ் வேலைசெய்யும் ஒருநபரின் வருமானம் 2000 ரூபாய் வரை அதிகரிக்கும்.

அரெசே நேரடியாக பணத்தை பரிமாற்றம்செய்யும் வேலை 8 பாகங்களாக நடைபெறும் எனச்சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர். விவசாயிகள், ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் இருப்பவர்கள், விதவைகள், ஏழை பென்ஷன்தாரர்கள், திவ்யாங் (மாற்றுத் திறனாளிகள்), ஜன் தன் திட்டத்தின் கீழ் இருக்கும் பெண்கள், உஜ்வாலா திட்டத்தின்கீழ் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர்கள்,

சுய உதவி குழுவினர்கள், EPFO கீழ் இருக்கும் அமைப்பு சார்ந்ததொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள்.வயதான ஏழை எளிய குடிமக்கள், தங்கள் கணவர்களை இழந்த விதவைபெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் (திவ்யாங்க் ஹிந்தியில் ) அடுத்த மூன்று மாதங்களுக்கு 1,000 ரூபாய் பெறுவார்கள் .

இந்தியாவில் வறுமை கோட்டுக்குக்கீழ் வாழும் 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக எல் பி ஜி கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்க இருக்கிறார்களாம்.

அதோடு இந்தியா முழுமைக்கும் இருக்கும், 63 லட்சம் பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு இதுவரை சொத்துபத்துக்கள் மற்றும் வங்கியில் பிணை இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன்வழங்கி வந்தார்கள். இனி 20 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்க இருக்கிறார்களாம்.

சம்பளத்தில் பிடித்தம்செய்யப்படும் 12 % பி எஃப் (ஊழியர் பங்கு + முதலாளி பங்கு) இரண்டுமே அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்பம். இந்த அறிவிப்பு எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தாது. 100 ஊழியர்களுக்குகீழ் இருக்கும் கம்பெனிகளில், 90 சதவிகிதம் ஊழியர்கள் மாதம் 15,000 ரூபாய்க்குகீழ் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்குத்தான் பி எஃப் தொகையை மத்திய அரசு வழங்கும்.

கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு என்று தனிநிதி இருக்கிறது. அந்தநிதியின் பெயர் Buildings and Other Construction Workers’ Fund. அந்த நிதியை கொடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி இருக்கிறது.

அதேபோல கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதனை, மருத்துவ மையங்கள் போன்ற மருத்துவ செலவுகளுக்கு, மாவட்ட மினரல்நிதியில் (District Mineral Fund) இருந்து செலவழித்து கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...