சமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 7000ஐ நெருங்கி விட்டது. 220 பேர் பலியாகி யுள்ளனர். கடந்த ஒருவாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மளமளவென உயர்ந்து விட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது,

கொரோனாவை தடுக்க தனிமை படுதலும் சமூகவிலகலுமே சிறந்த வழி என்பதால் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்நிலையில் அடுத்த ஒருசில வாரங்கள் மிக முக்கியமானவை. எனவே ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோச னைகள் நடந்துவருகின்றன.

இது குறித்து பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர் களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஒடிசாவில் ஏற்கனவே ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியமித்த 19 மருத்துவர்கள் அடங்கியகுழு முதல்வர் பழனிசாமியிடம் பரிந்துரைத்துள்ளது.

கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துபேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனாவை ஒழிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. கொரோனாவை தடுக்க இன்னும் 3 வாரங்கள் தேவை என பல்வேறு மாநிலங்களில் இருந்து தகவல்வந்துள்ளது. சமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...