தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை நட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, செப்டம்பர் 2024 -க்குள் 80 கோடி மரங்களையும், மார்ச் 2025-க்குள் 140 கோடி மரங்களையும் நடவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் “ஒட்டுமொத்த அரசு” மற்றும் “ஒட்டுமொத்த சமூகம்” அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்தியாவின் பசுமைப் போர்வையை மீட்டெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் மக்கள், சமூகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களை ஈடுபடுத்துகிறது. இந்த இயக்கத்திற்கு பெரும் வரவேற்று காணப்படுகிறது. பல மாநிலங்கள் தங்கள் மரம் நடும் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே எட்டிவிட்டன.

அருணாச்சலப் பிரதேசம் (1.74 கோடி), அசாம் (3.17 கோடி), சத்தீஸ்கர் (2.04 கோடி), குஜராத் (15.5 கோடி), கோவா (5.4 லட்சம்), ஹரியானா (12.20 கோடி), ராஜஸ்தான் (5.5 கோடி), மத்தியப் பிரதேசம் (4.41 கோடி), பஞ்சாப் (94 லட்சம்), நாகாலாந்து (34.6 லட்சம்), ஒடிசா (4.3 கோடி), தெலுங்கானா (8.34 கோடி) மற்றும் உத்தரபிரதேசம் (26.5 கோடி) ஆகியவை வலுவான சமூக பங்களிப்புடன் செப்டம்பர் 2024 க்கான இலக்குகளை தாண்டியுள்ளன. மேலும், பீகார் (1.46 கோடி), கேரளா (11.8 லட்சம்), மகாராஷ்டிரா (1.78 கோடி), சிக்கிம் (12 லட்சம்) மற்றும் உத்தரகண்ட் (82 லட்சம்) மாநிலங்கள் பிரச்சாரத்தின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், ஜம்மு-காஷ்மீர், லடாக், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன.

சமூக ஈடுபாடு மற்றும் அரசாங்க ஒத்துழைப்புக்கு வலுவான முக்கியத்துவத்துடன், இந்த முயற்சி தாய்மார்களை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், வரும் தலைமுறைகளுக்கு பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...