தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை நட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, செப்டம்பர் 2024 -க்குள் 80 கோடி மரங்களையும், மார்ச் 2025-க்குள் 140 கோடி மரங்களையும் நடவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் “ஒட்டுமொத்த அரசு” மற்றும் “ஒட்டுமொத்த சமூகம்” அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்தியாவின் பசுமைப் போர்வையை மீட்டெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் மக்கள், சமூகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களை ஈடுபடுத்துகிறது. இந்த இயக்கத்திற்கு பெரும் வரவேற்று காணப்படுகிறது. பல மாநிலங்கள் தங்கள் மரம் நடும் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே எட்டிவிட்டன.

அருணாச்சலப் பிரதேசம் (1.74 கோடி), அசாம் (3.17 கோடி), சத்தீஸ்கர் (2.04 கோடி), குஜராத் (15.5 கோடி), கோவா (5.4 லட்சம்), ஹரியானா (12.20 கோடி), ராஜஸ்தான் (5.5 கோடி), மத்தியப் பிரதேசம் (4.41 கோடி), பஞ்சாப் (94 லட்சம்), நாகாலாந்து (34.6 லட்சம்), ஒடிசா (4.3 கோடி), தெலுங்கானா (8.34 கோடி) மற்றும் உத்தரபிரதேசம் (26.5 கோடி) ஆகியவை வலுவான சமூக பங்களிப்புடன் செப்டம்பர் 2024 க்கான இலக்குகளை தாண்டியுள்ளன. மேலும், பீகார் (1.46 கோடி), கேரளா (11.8 லட்சம்), மகாராஷ்டிரா (1.78 கோடி), சிக்கிம் (12 லட்சம்) மற்றும் உத்தரகண்ட் (82 லட்சம்) மாநிலங்கள் பிரச்சாரத்தின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், ஜம்மு-காஷ்மீர், லடாக், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன.

சமூக ஈடுபாடு மற்றும் அரசாங்க ஒத்துழைப்புக்கு வலுவான முக்கியத்துவத்துடன், இந்த முயற்சி தாய்மார்களை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், வரும் தலைமுறைகளுக்கு பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...