தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை நட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, செப்டம்பர் 2024 -க்குள் 80 கோடி மரங்களையும், மார்ச் 2025-க்குள் 140 கோடி மரங்களையும் நடவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் “ஒட்டுமொத்த அரசு” மற்றும் “ஒட்டுமொத்த சமூகம்” அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்தியாவின் பசுமைப் போர்வையை மீட்டெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் மக்கள், சமூகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களை ஈடுபடுத்துகிறது. இந்த இயக்கத்திற்கு பெரும் வரவேற்று காணப்படுகிறது. பல மாநிலங்கள் தங்கள் மரம் நடும் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே எட்டிவிட்டன.

அருணாச்சலப் பிரதேசம் (1.74 கோடி), அசாம் (3.17 கோடி), சத்தீஸ்கர் (2.04 கோடி), குஜராத் (15.5 கோடி), கோவா (5.4 லட்சம்), ஹரியானா (12.20 கோடி), ராஜஸ்தான் (5.5 கோடி), மத்தியப் பிரதேசம் (4.41 கோடி), பஞ்சாப் (94 லட்சம்), நாகாலாந்து (34.6 லட்சம்), ஒடிசா (4.3 கோடி), தெலுங்கானா (8.34 கோடி) மற்றும் உத்தரபிரதேசம் (26.5 கோடி) ஆகியவை வலுவான சமூக பங்களிப்புடன் செப்டம்பர் 2024 க்கான இலக்குகளை தாண்டியுள்ளன. மேலும், பீகார் (1.46 கோடி), கேரளா (11.8 லட்சம்), மகாராஷ்டிரா (1.78 கோடி), சிக்கிம் (12 லட்சம்) மற்றும் உத்தரகண்ட் (82 லட்சம்) மாநிலங்கள் பிரச்சாரத்தின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், ஜம்மு-காஷ்மீர், லடாக், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன.

சமூக ஈடுபாடு மற்றும் அரசாங்க ஒத்துழைப்புக்கு வலுவான முக்கியத்துவத்துடன், இந்த முயற்சி தாய்மார்களை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், வரும் தலைமுறைகளுக்கு பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...