சுமார் ஒருமாதம் கழித்து மத்திய அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வந்துபணியாற்ற தொடங்கியுள்ளனர். அரசு கார்வசதிகள் கொண்ட அதிகாரிகளும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அனைவரும் வீட்டில்இருந்து பணியாற்றலாம் என்று பிரதமர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் அவரவர் வீட்டில்இருந்தபடி பணிகளை மேற்கொண்டனர். சுமார் ஒருமாத காலமாக இந்நிலை தொடர்ந்தது, இந்நிலையில் அனைவரும் தனிமை படுத்த பட்டு, கொரோன பாதிப்பு இல்லை என்பது உறுதி படுத்த பட்ட நிலையில் இன்று டெல்லியில் உள்ள அமைச்சர்கள் அவரவர் அலுவலகம் வந்துள்ளனர்.
குறைந்த அளவு உதவியாளர்களும் வருகை தந்துள்ளனர். குறிப்பாக, அரசுவாகனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள ஊழியர்கள் அலுவலகம் வரமுடிந்தது. பிறஊழியர்கள் வரவில்லை என்று தெரிகிறது. தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, இளைஞர் விவகாரதுறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் இன்று காலை, ரொம்ப சீக்கிரமே அலுவலகம் வந்த சிலமத்திய அமைச்சர்கள் ஆகும்.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |