நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

 நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய வழிகள் நான்கு அவை,

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுதல்
சரியான உணவுமுறைப் பழக்க வழக்கத்தை கடைபிடித்தல்
தேவையான உடற்பயிற்சிகளைத் தொடார்ந்து செய்தல்.
நோயுடையவர் உரிய மருத்துவம் பெறுதல்.

விழிப்புணர்வு
பொதுமக்கள் அனைவருக்கும் நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீரிழிவு குறித்த விழிப்புணர்வு என்றால், நீரிழிவுநோய் குறித்த அடிப்படைச் செய்திகளை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்வதே ஆகும்.

இந்நூல், நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வையும், நீரிழிவு நோயுள்ளவர்கள் பாதிப்புகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், விரிவாக விளக்கிக் கூறுகிறது.

முதல் செய்தி
நீரிழிவுநோய் குறித்த விழிப்புணர்வில் முதல் செய்தி, இந்நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதே.

உடல் இயக்கம்
நம் உடலுக்கு நாள் தோறும் அனைத்துப் பணிகளையும் செய்யச் சக்தி தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவுப்பொருட்கள்தான் நமக்கு வேலைகளைச் செய்வதற்குரிய சக்தியைக் கொடுக்கின்றன. இந்த உணவுப்பொருட்கள் முதலில் நம் உடலில் சர்க்கரையாக (குளுகோஸ்) மாற்றப்படுகின்றன. அப்படிச் சர்க்கரையாக மாற்றப்பட்டவை,உடலின் பல்வேறு பாகங்களில் உள்ள செல்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இன்சுலின்
சர்க்கரையாக மாற்றப்பட்ட உணவுப்பொருட்கள்,சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள செல்களுக்கும் செல்ல 'இன்சுலின்' என்னும் திரவம் நுழைவாயிலாகச் செயல்படுகிறது.

இன்சுலின் என்பது, நமது உடலிலுள்ள 'கணையம்' என்ற உறுப்பில் இருந்து சுரக்கும் ஒரு திரவம் (ஹார்மோன்) ஆகும். சர்க்கரை சக்தியாக மாற இன்சுலின் அவசியம் தேவைப்படுகிறது.

நீரிழிவு நோய்
உடலிலுள்ள செல்கள் எனப்படும் மிக நுண்ணிய பாகங்கள், நம் உடல் இயக்கத்திற்கும் துணை புரிகின்றன. இச்செல்களுக்குள் குளுகோஸ் சக்தியாக மாறி சென்று சேர வேண்டும்.

இன்சுலின் போதுமான அளவில் கணையத்திலிருந்து சுரக்காவிட்டாலோ, சுரந்த இன்சுலின் செயலிழந்து இருந்தாலோ சர்க்கரை இரத்தத்தில் அப்படியே நின்று விடுகிறது.

இப்படி இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை சேருவதையே, நீரிழிவுநோய் அதாவது சர்க்கரை நோய் என்று குறிப்பிடுகிறோம்.

 

ஒருவரது உடலில்

இன்சுலின் சுரக்கவே இல்லை என்றாலும் (No Secretion)
இன்சுலின் சுரந்தாலும் – அது போதுமான அளவு இல்லை-(பற்றாக்குறை) என்றாலும் (In Adequate)
இன்சுலின் சுரந்தாலும் – அது சரியாக வேலை செய்யாமல் பயனற்றுப் போனாலும் (In Active)

அவருக்கு ஏற்படுகிற பாதிப்பைதான் நீரிழிவுநோய் என்கிறோம்.

இயற்கையின் விந்தை
இன்சுலின் இன்மை,இன்சுலின் பற்றாக்குறை, இன்சுலினின் செயலற்றத்தன்மை ஆகிய மூன்று காரணங்களில் ஏதோ ஒன்று, ஒருவருக்கு ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது எதுவும் அறியப்படவில்லை. அது இயற்கையாக நடக்கிற ஒன்றாகவே அமைகிறது.
இயற்கையின் விந்தை

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...