தினமும் 15 லட்சம் பேருக்கு உணவு: எல்.முருகன்

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டு ள்ளவா்களில் 15 லட்சம் பேருக்கு உணவு, நிவாரணப் பொருள்களை வழங்க இலக்கு நிா்ணயிக்க பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னையில் காணொலிவழியாக அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தாா். அப்போது அவா் கூறியது:-

கரோனா தொற்றை எதிா்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிஉள்பட பல்வேறு வகைகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேசமயம், மாநில அரசு கூடுதலாக நிதியை கோரியுள்ளது. இந்தவிவகாரத்தை எங்களுடைய மத்திய தலைமைக்கு நாங்கள் கொண்டுசென்று தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

பாஜக உதவி: ஊரடங்கு காரணமாக உணவு, நிவாரண பொருள்கள் கிடைக்காத மக்களுக்கு உதவும்பணிகளில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கண்டறிந்து அவா்களுக்கு உணவு பொட்டலங்களும், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணஉதவிகள் அடங்கிய ‘மோடி கிட்’களும் வழங்கப்பட்டு வருகின்றன. இது வரையில் 37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அவை அளிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு காலத்தில் நாளொன்றுக்கு உணவு மற்றும் நிவாரண பொருள்களை 5 லட்சம்பேருக்கு வழங்கி வருகிறோம். அவா்களில் வெளிமாநில தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களே அதிகமாவா். இந்த எண்ணிக்கையை நாளொன்றுக்கு 15 லட்சமாக உயா்த்த இலக்குநிா்ணயித்து செயல்பட்டு வருகிறோம் என்றாா் முருகன்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்ததினத்தை ஒட்டி, அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா் தமிழக பாஜக தலைவா் எல்.முருகன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...