யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்தசிங் பிஸ்ட் திங்கட்கிழமை (20-4-2020) காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

71 வயதான ஆனந்தசிங் சிறுநீரக கோளாறுகளுக்கு சிகிச்சைபெற எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருமாதத்திற்கு முன் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

ஆனந்த் சிங் பிஸ்டின் உடல் உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்திலுள்ள அவரது சொந்தகிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் கரோனா வைரஸ்தொற்று பரவுவதை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றில் இன்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரிடம் அவரது தந்தை ஆனந்த்சிங் மறைந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தந்தை இறந்தசெய்தி கிடைத்தும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் முதலமைச்சர் யோகி ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து நடத்திமுடித்தார்.

அதன்பிறகுதான் தன்னுடைய தந்தை மறைவுக்கு குறித்து தன்னுடைய துக்கத்தை தெரிவித்தார்.

என்னுடைய தந்தையின் இறுதிநேரத்தில் அவர்கூட இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அதுமுடியாமல் போய்விட்டது என் தந்தையின் மறைவு எனக்கு பெரிதும் வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு எப்பொழுதும் இறைவனிடம் மாறாத விசுவாசத்துடன் இருக்க கற்றுக்கொடுத்தார். தன்னலமற்ற கடினமான உழைப்பு எப்பொழுதும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

அவரது இறுதிநேரத்தில் கூட அவருடன் என்னால் இருக்க முடியாமல் போனது. உத்தரப் பிரதேசத்தின் 23 கோடி மக்களை காக்கவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் அவருடைய இறுதிச்சடங்கில் கூட நான் நாளை கலந்துகொள்ள முடியாது. முழு ஊரடங்கு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நான் செல்வதற்கும் வாய்ப்பில்லை.

முழு ஊரடங்கு முடிந்த பிறகு நான் அங்குசென்று எனது அம்மாவையும் உறவினர்களையும் சந்தித்து பேசுவேன். இப்பொழுது ஊரடங்கு உத்தரவை மீறாமல் என்னுடைய அம்மாவும் உறவினர்களும் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்

முதலமைச்சரின் தந்தை ஆனந்தசிங் பிஸ்ட் மறைந்ததுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் .உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.