லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ள_விதிகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .
ராஜ்யசபாவில் தாக்கலான இந்தமசோதாவின் மீது நடந்த
விவாதத்தில்பேசிய பாரதிய ஜனதா தலைவர் அருண் ஜேட்லி,
லோக்பாலில் சிறுபான்மை யினருக்கு இடஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோத மானது. யாருமே ஏற்க_முடியாத ஒரு லோக்பாலை மத்திய அரசு தாக்கல்செய்துள்ளது.
சிபிஐ யை ஒரு சுதந்திரமான அமைப்பாக இயங்கவைக்கும் வகையில் லோக்பாலில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இப்போதிருக்கும் லோக்பாலின் கீழ், பிரதமரை_விசாரிப்பது என்பது சாத்தியமே இல்லாதது.
பாரதிய ஜனதா வலுவான லோக்பால்_மசோதாவையே விரும்புகிறது. லோக்பாலுக்கு அரசியல்_சட்ட அங்கீகாரம் வழங்கபடுவதை பாரதிய ஜனதா எதிர்க்கவில்லை. லோக்பால் மசோதாவை விளையாட்டு பொம்மையாகவே அரசு பார்க்கிறது, அதைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.