தமிழ்நாட்டின் அரசியலை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்

2024-ம் ஆண்டில் நடக்க விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாகட்சி சார்பாக 400 எம்.பி-க்கள் இருப்பார்கள். அவர்களில் 25 பேர் தமிழ் நாட்டிலிருந்து பாரதிய ஜனதா சார்பாக வென்ற வர்களாக இருப்பார்கள்” என்று அண்ணாமலை பேசினார்.

மோடி அரசின் எட்டு ஆண்டுச்சாதனையை விளக்கும் பொதுக் கூட்டம் நெல்லை மாவட்டம், செட்டிகுளம் பண்ணையூரில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அண்ணாமலை் பேசுகையில், “22 ஆண்டுக்கால அரசியல்வாழ்க்கையில் 14 ஆண்டுகள் முதல்வராகவும், எட்டு ஆண்டுகள் பிரதமராகவும் இருப்பவர்மோடி. இதுபோல் இந்தியாவில் வேறு யாரும் மக்களின் அமோகஆதரவுடனும், செல்வாக்குடனும் இருந்ததில்லை. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அதிகப்படுத்தி யிருப்பவர் மோடி.

2024-ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 400 எம்.பி-கள் வெற்றிபெற வேண்டும். அவர்களில் 25 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மோடி மூன்றாவதுமுறையாக ஆட்சி அமைப்பார். அந்த அமைச்சரவையில் கேபினட் அமைச் சர்களாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அரசியலை மாற்றவேண்டிய கட்டாயத்தில் நாம்இருக்கிறோம். தமிழ்நாட்டின் அரசியலை நமக்குப் பிடிக்கவில்லை. ஊழல்நிறைந்த அரசியலாக உள்ளது. கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் கரன்ட்டிலும்கூட தி.மு.க-வினர் ஊழல் செய்கிறார்கள். ஊழல் பெருச்சாளிகளைக் கொண்டு தி.மு.க அரசு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு 45 கோடி நபர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கப் பட்டதுடன், 45 கோடி மக்களின் ஜன்தன்கணக்கில் 22 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்தியில் எட்டு ஆண்டுகள் எந்தப்பிரச்னையும் இல்லாமல் அமைச்சரவை சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த எட்டு ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சியில் ஓர்அமைச்சர் ஊழல் செய்தார் என்று சொல்லமுடியாத அளவுக்கு மோடி நேர்மையாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த 400 ஆண்டுகளில் இந்தியா இழந்ததை பிரதமர் மோடி எட்டு ஆண்டுகளில் திரும்பப்பெற்றுக் கொடுத்துள்ளார். வரும் காலங்களில் இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வேலைதேடி வருவார்கள். அந்த அளவுக்கு அறவழியில் மத்தியில் ஆட்சி நடக்கிறது” என்று பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...