சீனாவில் இருந்து நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு ஊக்கம்

நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதுகுறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், சீனாவில்இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கும் கூட்டத்தில் ஊக்கம் அளித்தார்.

 

சீனா உள்ளிட்ட நாடுகளில்இருந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன் உள்நாட்டிலும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தகூட்டத்தில். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்தபின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளத்தை சீனாவிற்கு இருந்து வேறுநாடுகளுக்கு மாற்றும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி வெளியேற விரும்பும் நிறுவனங்கள், வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கான திட்டங்களை உருவாக்குமாறு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு ஊக்கம் அளித்தார். அத்துடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் நேற்று ஆலோசனை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முதலீடுகள் உடனே வந்துசேரவும், உடனடியாக பயன் கிடைக்கும் வகையில் செயல்படவேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு வேகமாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும், தேவையான ஒப்புதல்களை உடனுக்குடன் அளிக்கவேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

தொழில்துறை ஊக்கம்பெறவும், தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினார்.

சீனாவில் தொழிலாளர்களுக்கான ஊதியம் கடுமையாக அதிகரிப்பு பிரச்னையால் ஏற்கனவே பல பன்னாட்டு நிறுவனங்களை உற்பத்தி தளங்களை வேறு நாட்டிற்கு மாற்றலாமா என்று யோசித்து வந்தன. இந்தியா அந்த நிறுவனங்களை தங்கள் நாட்டிற்குள் கவர்ந்து இழுக்க வேகம்காட்டி வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பிறகு சீனா விநியோக சந்தையில் உலகளாவிய ஆதிக்கம் செலுத்துவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஏராளமான நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இதை சாதகமாக பயன் படுத்த இந்தியா விரும்புகிறது. ஏற்கனவே தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறைதிட்டத்தில் உடனே அனுமதி வழங்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலத்தில் தொழில்தொடங்க மத்திய அரசு உடனே அனுமதி அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களும் முதலீட்டாளர்களை ஈர்க்க குழுஅமைத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசும் சீனா உள்பட வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டுவர குழு அமைத்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...