சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ஒரு புதிய மன்பாண்டத்திலிட்டு, கற்கண்டு பொடி அதற்குச் சம அளவாகக் கூட்டி மலைவாழை அல்லது பேய்வாழைப் பழம் சம அளவாகப் போட்டு, நன்கு கலக்கும்படி செய்து, காலை மாலைகளில் ஒரு பழமும் 2 தேக்கரண்டி மருந்து கலவையும் உட்கொண்டால் வியக்கத்தக்க வகையில் வெள்ளைப்பாடு நிற்கின்றது.
கைப்பிடியளவு அருகம் புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு வடிகட்டி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத் தூள் தேவைக்கு ஏற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இரு வேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப் படுதல் குணமாகும்.
வெண்பூசணி சாறு தயாரித்துப் பருகிவந்தால் பத்து நாட்களில் குணமாகிவிடும். இல்லை 1 மாதத்தில் குணமாகும்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.