இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு

கொரோனா பிரச்னையால், பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல, நேற்று வரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே செய்திதொடர்பாளர் கூறியதாவது:பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், வெவ்வேறு மாநிலங்களில் வேலைபார்த்து வந்தனர். தொழிலாளர்கள் போக்குவரத்து முடங்கியதால், இவர்களால் சொந்தமாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை இருந்தது. தொழிலாளர்களை மீட்க, ரயில்வே சார்பில், சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப் பட்டது.இதன்படி, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இதுவரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ரயிலிலும், 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.

இந்த சிறப்பு ரயில்கள் மூலம், இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கான செலவுகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன், மத்திய அரசு பகிர்ந்துள்ளது. குஜராத், கேரளா ஆகியமாநிலங்களில் இருந்து தான், அதிகமான தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பீஹார், உ.பி., மாநிலங்களுக்குத் தான், அதிக தொழிலாளர்கள் வந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சிவ் கோபால் மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அரசியல் வேண்டாம் சிறப்பு ரயில்கள், இலவசமாக இயக்கப்படுவதாக தெரிந்தால், ரயில்வேஸ்டேஷன்களில் தொழிலாளர்கள் அதிக அளவில் கூடி விடுவர்; இது, கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும். இதனால் தான், சிறப்புரயில்களில் செல்வதற்கு தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, ரயில்வே அறிவித்தது. கொரோனா வைரஸ் போன்ற பெரியநெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், இதுபோன்ற அரசியல் விளையாட்டுகள் வேண்டாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...