கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூலம் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது

கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்குமுன்பு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான சவால்களை எதிர்கொண்டார், இது அவரது பதவிக்காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களில் மிகப்பெரியது. அரசாங்க எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் நாட்டை உலுக்கின. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் வருகை தந்த போதே டெல்லியில் கலவரம் வெடித்தது. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம்முழுவதும் பரவியது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தபிரச்சனைகளால் பொருளாதார பிரச்சனைகள் மோசமாகின.

ஆனால் 130 கோடி மக்கள் தொகைகொண்ட ஒரு நாட்டிற்கு, 83 ஆயிரம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 3 ஆயிரம் இறப்புகள். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ரஷியாபோன்ற வல்லரசு நாடுகளைவிட எண்ணிக்கை மிகக்குறைவு.

இதனால் கடந்த சிலமாதங்களில் மோடியின் மீதான மதிப்பீடுகள் உயர்ந்து உள்ளன, இந்த நெருக்கடியான காலத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை விட, பிரதமர் மோடி, வெற்றிகரமான தலைவராக திகழ்கிறார்.

வைரசால் ஏற்படும் பெரும் பாதிப்பில் இருந்து இந்தியா விடுபட்டால், பிரதமர் மோடி, மிக வலுவான தலைவராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. இவரின் புகழ் உயர்ந்துகொண்டே வருகிறது.

மோடி, எதேச்சதிகார போக்கு கொண்டவரல்ல; அனைவரையும் அரவணைத்து செல்பவர். அதனால்தான், ஊரடங்கு காலத்தில், பிரதமர் மோடி வெளியிடும் வழிமுறைகளை, கோடிக்கக்கணக்கான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.பிரதமர் மோடி, கொரோனா வைரசை குறைத்து மதிப்பிட வில்லை. நோயின் பரவலைத் தடுக்க, கொள்கை வேறுபாடுகளை மறந்து, அனைத்து மாநில அரசுகளுடனும், ஒன்றிணைந்து செயலாற்றிவருகிறார். கிட்டத்தட்ட, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை, மிகக் குறைந்து காணப்படுவதற்கு, முக்கிய காரணமாக, பிரதமர் மோடி திகழ்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பகுதி ஒரேமாதிரியாக உணர்கிறது என்று கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன. பல இந்தியர்கள் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

பலநாடுகளில் ஆன்லைன் ஆய்வுகள் செய்யும் அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட், மற்ற உலக தலைவர்களைவிட மோடி சிறப்பாக செயல்படுவதாக கூறி உள்ளது.

டிரம்ப், புதின், ஜெர்மனி பிரதமர் மெர்கல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பலரைவிட அவரது புகழ் 80 சதவீதம் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு கருத்துக்கணிப்பில் 93.5 சதவீதம் பேர் மோடி கொரோனா வைரஸ் நெருக்கடியை திறம்பட கையாளுவதாக தெரிவித்து உள்ளனர். 93 சதவீதத்துக்கும் அதிகமான பேர் மோடி அரசு நெருக்கடியை திறம்பட கையாளும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...