பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர்.
தற்போது நிலவிவரும் சுகாதார நெருக்கடியின் போது, இருநாடுகளிலும் உள்ள குடிமக்களின் நலனை உறுதிசெய்யவும், அவர்கள் தாய்நாடு திரும்பவும் அளித்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர்.
பிலிப்பைன்சுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களைத் தொடர்ந்துஅனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பாராட்டினார்.
பெருந்தொற்றுக்கு எதிரான பிலிப்பைன்சின் போருக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதிபர் டுடேர்தேவிடம் தெரிவித்த பிரதமர், ஒருவேளை கொரோனாவிற்கு தடுப்பு மருந்துக் கண்டுபிடிக்கப்பட்டால் அதனையும் சேர்த்து, கட்டுபடியாக கூடிய விலையில் மருந்துகளைத் தயாரிக்கும் இந்தியாவின் நன்கு நிறுவப்பட்டத்திறன் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பயன்படுத்தப் படும் என்று தெரிவித்தார்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்சை ஒருமுக்கியப் பங்குதாரராக இந்தியா கருதுவாக பிரதமர் குறிப்பிட்டார்.விரைவில் பிலிப்பைன்சின் தேசியதினத்தை முன்னிட்டு, அதிபர் டுடேர்தேவுக்கும், பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |