பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர்.

தற்போது நிலவிவரும் சுகாதார நெருக்கடியின் போது, இருநாடுகளிலும் உள்ள குடிமக்களின் நலனை உறுதிசெய்யவும், அவர்கள் தாய்நாடு திரும்பவும் அளித்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர்.

பிலிப்பைன்சுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களைத் தொடர்ந்துஅனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பாராட்டினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான பிலிப்பைன்சின் போருக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதிபர் டுடேர்தேவிடம் தெரிவித்த பிரதமர், ஒருவேளை கொரோனாவிற்கு தடுப்பு மருந்துக் கண்டுபிடிக்கப்பட்டால் அதனையும் சேர்த்து, கட்டுபடியாக கூடிய விலையில் மருந்துகளைத் தயாரிக்கும் இந்தியாவின் நன்கு நிறுவப்பட்டத்திறன் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பயன்படுத்தப் படும் என்று தெரிவித்தார்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்சை ஒருமுக்கியப் பங்குதாரராக இந்தியா கருதுவாக பிரதமர் குறிப்பிட்டார்.விரைவில் பிலிப்பைன்சின் தேசியதினத்தை முன்னிட்டு, அதிபர் டுடேர்தேவுக்கும், பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...