லடாக்கிலே என்ன பிரச்சினை?

லடாக்கின் பிரச்சினை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள கூடியது. சில்க் ரோட் எனப்படும் பட்டுவழிச் சாலையிலே லடாக் ஒரு முக்கிய இணைக்கும் புள்ளி. சீனா பாக்கிஸ்தான் பொருளாதாரவழி எனும் திட்டத்தின் எல்லா ரோடுகளும் போக வர லடாக் முக்கியமான இடம்.

இதனால்தான் தெற்கு திபெத் எனப்படும் அருணாச்சல் பிரதேசத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் சீனா லடாக்கின் மீது குறியாக இருக்கிறது.

ஆனால் அதான் இந்த பிரச்சினை 70 வருசமா இருக்கே இப்போ என்ன புதுசான்னா?

நமது அரசு இப்போது அங்கே நல்ல சாலை வசதிகளை அமைக்கிறது. இது சீனாவுக்கு ஏற்புடையதல்ல. ஏனென்றால் நல்ல சாலை வசதிகள் இருந்தால் ராணுவம் விரைவாக அப்பகுதியை அடையும்.

அதுமட்டும் தானா பிரச்சினை என்றால் இல்லை. 370 ஐ நீக்கியதும் சீனாவுக்கு பெருத்தபயத்தை கொடுத்திருக்கிறது.370க்கு முன்பு வரை லடாக் பகுதி கவனிக்கப்படவே இல்லை. காஷ்மீரத்து விலைபோன அரசியல்வியாதிகளோ சீனா பாக்கிஸ்தான் பொருளாதார வழி திட்டத்திலே சேர்ந்துகொண்டால் காஷ்மீருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என பேசி வந்தார்கள் எனவே சீனா நம்பிக்கையாக இருந்தது லடாக் சீனாவுக்குத்தான் என.

அதுக்கு ஆப்பு 370 வழியாக வந்தது. சீனா இதை எதிர்பார்க்கவில்லை.

இப்போது மோடி அரசு அந்த 370 ஐ திரும்பவும் கொண்டு வந்தால் ஒழிய லடாக்கிலே பிரச்சினையை தீர்க்கமாட்டோம் என சொல்லியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலே இன்னோர் தகவலும் உண்டு, நமது ராணுவம் நேற்றைய தினங்களிலே குண்டு வீசித்தாக்கியதிலே பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவுக்கு போகும் பாதை துண்டிப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்திருக்கிறது.

எனவே இந்த துண்டிப்பு சீனாவுக்கு பெரும் சிக்கல். மலாய்க்கா ஸ்ரெயிட்ஸ் எனப்படும் சிங்கப்பூர் வழியாக போகும் நீர்ப்போக்குவரத்து முடக்கப்பட்டால் சீனாவின் மொத்த ஏற்றுமதிக்கும் ஆபத்து. எனவே தான் இந்தப்பக்கம் ஒரு தரைவழி இணைப்பு தொடங்கியது.

அதிலே சேரும்படி நம்மை மிரட்டி பார்த்தது.370 ஐ நீக்கியதற்குபின்பு ஐநா சபைவரை போவோம் என மிரட்டி பார்த்தது.

மோடியோ எதற்கும் மசியவில்லை கண்டுகொள்ளவில்லை.

கடைசி முயற்சியாக இதிலெ இறங்கியிருக்கிறது.

அப்படியானால் நம்பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதா? இல்லை. எப்படி?

பாக்கிஸ்தான் எல்லை போல சீனாவுடனான எல்லை வரையறுக்கப் படவில்லை. அங்கே நடுவிலே இருக்கும் பகுதியை இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடு கின்றன.

நடுவிலே இருக்கும்பகுதிக்கு யார் போனாலும் பிரச்சினை தான். ஆனால் முடிவு எட்டப்படும் வரை யாருக்கும் சொந்தமில்லை என பேசிக்கொண்டிருக்கிறோம்.

சரி இப்போது என்ன பிரச்சினை?

காவான் பள்ளத்தாக்கு எனும் பள்ளத்தாக்கிலே சீனப்படைகள் நுழைய முயன்று தடுக்கப்பட்டன. ஆனால் நமது ராணுவம் அதை ஆக்கிரமித்து உள்ளது என சீனா சொல்கிறது.

இதனால் போர்வருமா?

சீனாவுக்கு போரை துவக்குதிலே எல்லாம் விருப்பமில்லை. வெல்ல முடியாது என தெரியும். ஆனால் இப்படி மாதமொருமுறை பிரச்சின செய்துகொண்டே இருக்கும்.

தீர்வு தான் என்ன?

சீனா தன்னுடைய ஆதிக்க குணத்தை கைவிடும் வரை தீர்வு எட்டப்பட முடியாது. முன்பை விட இப்போது நமது வளர்ச்சியை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கிறது. பாக்கிகளை வைத்து தொல்லை கொடுக்கலாம் என்றிருந்ததற்கு மோடி முடிவு கட்டிவிட்டார் என்பதால் இப்போது நேரடியாக களமிறங்கியிருக்கிறது.

மோடி இதற்கும் ஒரு முடிவு காண்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...