சீன தூதரகத் திலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நிதி

புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத் திலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நிதி வரப்பெற்றுள்ளது என்று பாஜக காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டை எழுப்பியது.

சுதந்திரவாணிப ஒப்பந்தத்தை இரு நாடுகளிடையே ஊக்குவிக்க லஞ்சமாக அளிக்கப்பட்டதா என்று பாஜக,  கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மத்தியப்பிரதேச மெய்நிகர் பேரணியில் ஜே.பி.நட்டாவுடன் சேர்ந்து காங்கிரஸை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் ராஜீவ்காந்தி அறக்கட்டளை என்பது காங்கிரஸ் கட்சியின் ஒருநீட்சிதான் என்று ரவிசங்கர் பிரசாத் அறுதியிட்டார். “2009-11-ல் இந்தியா-சீனா இடையே சுதந்திரவாணிப ஒப்பந்தத்தை ஊக்குவிக்க ராஜீவ்காந்தி அறக்கட்டளை பிரச்சாரித்தது. இந்திய – சீனசுதந்திர வாணிபத்தை, “விரும்பத் தக்கது, எளிதானது, பயன் தரக்கூடியது” என்று காங்கிரஸ் வர்ணித்தது.

சீனாவுடனான வாணிப பற்றாக்குறை விவகாரத்தை பல ஆண்டுகளாக இந்தியா குறை எழுப்பபோராடி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேஜகூ பிராந்திய ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டுறவில் இணைய மறுத்துவருகிறது.

சீனாவுடனான சுதந்திர வாணிப ஒப்பந்தத்தை ஊக்குவிக்க சீனா ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு லஞ்சமாக நிதியளித்ததா? காங்கிரஸ் தலைமை ஐமுகூ ஆட்சியில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக் குறை 33 மடங்கு அதிகரித்தது, அதற்குத்தான் லஞ்சமாக நிதியா?” என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் குற்றச் சாட்டைத் தீவிரப்படுத்திய போது, “அன்னிய பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டம், 1976 விதிமுறைகளை இந்த அன்பளிப்பு மீறியுள்ளதாக சந்தேகிக்கிறோம். எந்தஒரு கல்வி அல்லது பண்பாட்டு அமைப்பும் அன்பளிப்பு பெறும்முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் அப்போதைய யுபிஏ அரசிடம் ராஜீவ் காந்தி அறக்கட்டளை இதைத் தெரிவித்ததா?

2008-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது காங்கிரஸ். இது வரை கட்சிக்கும் கட்சிக்கும் இடையேயான உறவுக்கான அவசியம் என்ன என்பதை காங்கிரஸ் விளக்கவில்லை.

பிற அரசியல் கட்சிகளுடன் இப்படி எத்தனைப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காங்கிரஸ் மேற்கொண்டது என்பதை அக்கட்சி விளக்கவேண்டும்” என்று ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...