ஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை

‘ஏழைகளுக்கு உணவுப் பொருள் அளிக்கும் திட்டத்தை (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) நவம்பா் மாதம் வரையிலும் நீட்டித்திருப்பது பிரதமா் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கையாகும்’ என்று பாஜக தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாடுமுழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவசரேஷன் பொருள்கள் அளிக்கும் திட்டத்தை நவம்பா்வரை நீட்டிப்பதாக செவ்வாய் கிழமை பிரதமா் மோடி அறிவித்தாா்.

இத்திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசியும், மாதத்திற்கு ஒருகிலோ பருப்புவகை இலவசமாக வழங்கப்படும். ஆரம்பத்தில் இந்ததிட்டம் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதனை நவம்பா்வரை மேலும் நீட்டிப்பதாக பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

இத்திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து ஜெ.பி.நட்டா வெளியிட்ட சுட்டுரைப்பதிவில், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகுறித்து நாட்டுமக்களுக்கு பிரதமா் மோடி விழிப்புணா்வு ஊட்டியும், அதனால் ஏற்படும் ஆபத்தை உணா்த்தியும் நாட்டை வழி நடத்தி வருகிறாா். இந்த தொற்று நோய்க்கு மத்தியிலும் உயிா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிவரும் பிரதமா் பாராட்டப்பட வேண்டியவா்.

‘பிஎம்ஜிகேஏஒய்’ திட்டம் நீட்டிக்கப் பட்டிருப்பது ஒரு தொலை நோக்கு நடவடிக்கை. இதன் மூலம் ஏழைகளின் நலனில் பிரதமா் மோடி கொண்டுள்ள உறுதிப் பாட்டை இதுகாட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...