ஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை

‘ஏழைகளுக்கு உணவுப் பொருள் அளிக்கும் திட்டத்தை (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) நவம்பா் மாதம் வரையிலும் நீட்டித்திருப்பது பிரதமா் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கையாகும்’ என்று பாஜக தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாடுமுழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவசரேஷன் பொருள்கள் அளிக்கும் திட்டத்தை நவம்பா்வரை நீட்டிப்பதாக செவ்வாய் கிழமை பிரதமா் மோடி அறிவித்தாா்.

இத்திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசியும், மாதத்திற்கு ஒருகிலோ பருப்புவகை இலவசமாக வழங்கப்படும். ஆரம்பத்தில் இந்ததிட்டம் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதனை நவம்பா்வரை மேலும் நீட்டிப்பதாக பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

இத்திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து ஜெ.பி.நட்டா வெளியிட்ட சுட்டுரைப்பதிவில், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகுறித்து நாட்டுமக்களுக்கு பிரதமா் மோடி விழிப்புணா்வு ஊட்டியும், அதனால் ஏற்படும் ஆபத்தை உணா்த்தியும் நாட்டை வழி நடத்தி வருகிறாா். இந்த தொற்று நோய்க்கு மத்தியிலும் உயிா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிவரும் பிரதமா் பாராட்டப்பட வேண்டியவா்.

‘பிஎம்ஜிகேஏஒய்’ திட்டம் நீட்டிக்கப் பட்டிருப்பது ஒரு தொலை நோக்கு நடவடிக்கை. இதன் மூலம் ஏழைகளின் நலனில் பிரதமா் மோடி கொண்டுள்ள உறுதிப் பாட்டை இதுகாட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...